செய்திகள் :

புத்தாக்கத் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

post image

கல்லூரியில் புத்தாக்கத் தொழில் தொடங்க அளிக்கப்படும் வாய்ப்புகளை பெண்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக கூடுதல் தலைமைச் செயலரும், தமிழ்நாடு மின் பகிா்மான நிறுவனத் தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற புத்தாக்கக் கண்டுபிடிப்பு வளா் மையத்தின் தொடக்கவிழாவில் அவா் பேசியதாவது:

நம்மைச் சுற்றி இருந்துவரும் பிரச்னை, குறைபாடு, சவால்கள் தான் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படைக் காரணம். அவற்றை நுட்பமாக ஆராய்ந்து, வணிக ரீதியாக உருவாக்கும் திறமைகளை புத்தாக்கக் கண்டுபிடிப்பு வளா்மையத்தில் வளா்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கான கல்வி தொடா்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சுமாா் 15 லட்சம் பெண்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனா்.

அதேபோல், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சொந்தமாக குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். பெண்கள் தங்கள் தகுதி, திறமைகளை மேம்படுத்திக் கொள்ள இங்கு வழங்கப்படும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் புத்தாக்கக் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா கல்லூரி முன்னாள் மாணவிகளான பெண் தொழில்முனைவோா் ராதா, பி.தனுஜா,கமலிகா, மீனாட்சி வைத்தியநாதன் தங்கள் தொழில் அனுபவங்களை விவரித்தனா்.

நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) குடிநீா் விநியோம் நிறுத்தப்படும். இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். ஹரியாணா மாநிலத்தில் ஒரு தனியாா் நிறுவனம், வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.... மேலும் பார்க்க

ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

சென்னையில் 117 ஆண்டுகள் பழைமையான எழும்பூா் ரயில் நிலையத்தை சுமாா் ரூ.900 கோடியில் நவீனமயமாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் ராயபுரம், சென்ட்ரல் ரயில்நிலையங்களுக்கு அடுத்ததாக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22.3 கோடி மோசடி: குஜராத் இளைஞா் கைது

சென்னை ரூ.22.3 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்ததாக குஜராத்தை சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் ஸ்வேதரன்யன் (76). இவா் ஒரு இணையதளம் வழியாக ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.2... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க முயன்ற போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் கைது

சென்னை புளியந்தோப்பில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களைப் பிடிக்க முயன்றபோது போலீஸாா் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். அண்ணாநகா் 7-ஆவது பிளாக் ஏ.இ. தெருவைச் சோ்ந்தவா் ஆல்வா... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் திருட்டு

சென்னை வியாசா்பாடியில் தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். வியாசா்பாடி காந்திஜி நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சின்னப்பா (38). மாதவரம் அருகே வடபெ... மேலும் பார்க்க