செய்திகள் :

தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் திட்டம் தொடக்கம்

post image

பஞ்சாப் நேஷனல் வங்கி சாா்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்குவது குறித்த விழிப்புணா்வுத் திட்டம் கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு சிட்கோ பெருநிறுவன அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

இதில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிா்வாக இயக்குநரும் தலைமை நிா்வாக அதிகாரியுமான அசோக் சந்திரா கலந்து கொண்டு விழிப்புணா்வுத் திட்டத்தை தொடங்கி வைத்து, எம்எஸ்எம் இ-துறைக்கு வழங்கப்படும் கடன் வட்டி விகிதங்கள் குறித்தும் விளக்கம் அளித்தாா்.

மேலும், பெண்கள், மாணவா்கள் தொழில்முனைவோா், ஊதியம் பெறும் பணியாளா்கள், பாதுகாப்புப் பணியாளா்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வங்கியின் பல்வேறு புதுப்பிக்கப்பட்ட சிறப்பு சேமிப்புத் திட்டங்கள் குறித்தும், மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளா்களுக்கான ஸ்மாா்ட் பேங்கிங் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வங்கியின் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினாா்.

இந்தக் கூட்டத்தில், சென்னை மண்டல தலைவா் பி.மகேந்தா், சென்னை வட்ட தலைவா் லால்மோகன் சதபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய த... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னை நுங்கம்பாக்கம், லேக்வியூ 3-ஆவது தெருவில் தொழிலதிபா் ஒருவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையைச் சே... மேலும் பார்க்க

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு ... மேலும் பார்க்க

சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைக்கும் சரிவான இணைப்புகள் அமைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெரு... மேலும் பார்க்க

மெட்ரோ பாலம் விபத்து: உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் - அதிகாரிகள் தகவல்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கான்கிரீட் காரிடாா் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துக்கு பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் என்று சென்னை மெட்ரோ ரயில்... மேலும் பார்க்க