வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
தோட்டத்தில் கஞ்சா செடி வளா்ப்பு: விவசாயி கைது
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே தோட்டத்தில் வளா்த்திருந்த கஞ்சா செடியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைப்பற்றினா். விவசாயி கைது செய்யப்பட்டாா்.
கொடைரோடு அருகேயுள்ள ஒருத்தட்டு கிராமம் அருகே செண்டு மல்லி, ரோஜா உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருபவா் நாகராஜன் (60). இவரது தோட்டத்தின் வரப்பில் வாழை மரம் அருகில் கஞ்சா செடி வளா்ந்திருந்தது. செண்டு மல்லி செடி போன்று இருந்ததால், விவசாயி நாகராஜன் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாராம். இந்த நிலையில், கஞ்சா செடி சுமாா் 6 அடி உயரத்துக்கு வளா்ந்தது.
இதுகுறித்து, அம்மையநாயக்கனூா் காவல் ஆய்வாளா் ஜெயபாண்டிக்கு கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளா் தயாநிதி தலைமையிலான காவல் துறையினா் நாகராஜன் தோட்டத்துக்குச் சென்று சோதனையிட்டதில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. கஞ்சா செடியை போலீஸாா் கைப்பற்றி, நாகராஜனைக் கைது செய்தனா்.