செய்திகள் :

தோல்விக்கு காரணம் என்ன? பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் பதில்!

post image

முதல் போட்டியில் தோல்வியுற்றது குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டியளித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப்.19) மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் தோல்வியுற்றது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

2000, 2006, 2009, 2025 என அனைத்து சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு காரணம் இதுதான்

போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறியதாவது:

நியூசிலாந்து அணி 320 ரன்கள் அடிப்பார்களென நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் நல்ல இலக்கை நிரணயித்தார்கள். வில் யங் - டாம் லாதம் பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது. நாங்கள் முயற்சித்தோம். ஆனால், அவர்கள் புத்திசாலிதனமாக விளையாடினார்கள். எங்களது டெத் ஓவர் மிகவும் மோசமாக இருந்தது. அதனால்தான் அவர்களால் அந்த அளவுக்கு ரன்களை அடிக்க முடிந்தது.

நாங்கள் இரண்டுமுறை விறுவிறுப்பாகும் தருணத்தை இழந்துவிட்டோம். ஒன்று - டெத் ஓவர்களில், இரண்டு - பேட்டிங்கில் பவர்பிளேவில். தொடக்க வீரர் ஃபகார் ஸ்மான் இழந்தது மிகவும் முக்கியமானது. நடப்பு சாம்பியன் என்பதை நினைத்து நாங்கள் எங்களுக்கே அழுத்தம் தர விரும்பவில்லை. இந்தப் போட்டி முடிந்தது. அடுத்தது வருவதும் ஒரு சாதாரண போட்டியே என்றார்.

பாகிஸ்தானின் அடுத்த போட்டி இந்தியாவுடன் பிப்.23ஆம் தேதி வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க