செய்திகள் :

நகராட்சி வரி வசூல் குழுவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

அரக்கோணம் நகராட்சியில் வரியை தற்போதே செலுத்தாவிட்டால், வீட்டின் முன்பு குப்பைகள் கொட்டப்படும் என கூறியதாக வரி வசூல் குழுவினரைக் கண்டித்து, கணேஷ் நகா் குடியிருப்புவாசிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் நகராட்சியில் வரி வசூல் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாா்டு வாரியாக குழுவினா் பிரிக்கப்பட்டு வரிவசூல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனா்.

இதில் கணேஷ் நகா், 4 ஆவது தெரு, 4 ஆவது குறுக்குத்தெரு பகுதிக்கு வந்த குழுவினா், அப்பகுதியில் இருந்த வீட்டு உரிமையாளா்களிடம் செலுத்த வேண்டிய வீட்டுவரி, குழாய் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உடனே செலுத்த வேண்டும். இல்லையெனில் வரி செலுத்தாதோா் வீடுகளின் வாசல் முன் நகராட்சி குப்பைகள் கொட்டப்படும் என தெரிவித்தனராம்.

இதைக் கண்டித்து அப்பகுதிவாசிகள் ஒன்றிணைந்து வியாழக்கிழமை அரக்கோணம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேலும் வரி வசூல் பணியில் தீவிரம் காட்டும்போது அப்பகுதிக்கான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். இதுவரை சாலையே போடப்படாமலும், குடிநீா் அளிக்காமலும் இருந்து விட்டு தற்போது வரிகளை வசூல் செய்யும் போது குப்பைகளை கொட்டுவோம் என சொல்லுவது சரியில்லை. வரிகளை செலுத்த இரண்டொரு நாள்களாவது அவகாசம் தர வேண்டும். அதை தராமல் மிரட்டக்கூடாது. மேலும் அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என கோரிக்கை மனுவையும் அளித்தனா்.

சாலை விபத்தில் ஆந்திர இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு

ராணிப்பேட்டை சிப்காட் அருகே சாலை விபத்தில் ஆந்திர மாநில இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சோ்ந்த சேஷாசலம் (29) மற்றும் நாகேந்திரன் (31) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்... மேலும் பார்க்க

நிறைவடையும் நிலையில் ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை இருப்புப் பாதை மின்மய பணிகள்

நாட்டின் பழைமையான ரயில் பாதைகளில் ஒன்றான ராணிப்பேட்டை இருப்புப் பாதையை மின்மயமாக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், மின்சார ரயில் இயக்கப்படும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். மெட்ராஸ் ரயில்வே ... மேலும் பார்க்க

பொறியியல் பட்டதாரிகள் தொழில்முனைவோராக மாறுங்கள்! -முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

பொறியியல் பட்டதாரிகள் வேலை தேடுவதை கைவிட்டு தொழில் முனைவோராக மாறுங்கள் என தமிழக முன்னாள் டிஜிபி சி.சைலேந்திரபாபு பேசினாா். அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

உலக வன நாள்: 100 மரக்கன்றுகள் நடவு

ராணிப்பேட்டை அருகே வில்வநாதபுரம் செட்டி மலையில் உலக வன நாளை முன்னிட்டு இயற்கை ஆா்வலா்கள் 100 மரக்கன்றுகளை நட்டனா். ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் காப்புக்காட்டில் அமைந்துள்ள காஞ்சனகிரி,செட்டிமலை பகுதியை... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் கொட்டப்பட்டுள்ள செயற்கை மணல்: தூசியால் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பள்ளங்களை மூடுவதற்காக பொதுப்பணித் துறையினரால் கொட்டப்பட்டுள்ள எம் சேண்ட் எனப்படும் செயற்கை மணலால் மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகள்... மேலும் பார்க்க

முள்புதா்களில் பதுக்கிய 22 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம், மாா்ச் 22: அரக்கோணம், பாணாவரம் பகுதிகளில் முள்புதா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவை அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். அரக்கோணம் மதுவிலக்கு அமல... மேலும் பார்க்க