செய்திகள் :

நடிகர் கபில் சர்மாவின் புதிய ஹோட்டலில் காலிஸ்தான் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு!

post image

நடிகர் கபில் சர்மாவின் புதிதாகத் திறக்கப்பட்ட ஹோட்டலில் காலிஸ்தான் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு சில நாள்கள் ஆன நிலையில், இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

கப்ஸ் கஃபே என்று அழைக்கப்படும் இந்த ஹோட்டல் சில நாள்களுக்கு முன்னதாக கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது.

காரில் அமர்ந்திருக்கும் ஒருவர், ஹோட்டலின் ஜன்னலில் 9 முறை துப்பாக்கியால் சுடுவது போன்ற காணொளியில் வெளியாகியுள்ளது. இந்த விடியோ புதன்கிழமை இரவு (கனடா நேரப்படி) எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலானாய்வு முகமையின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஹர்ஜித் சிங் லட்டியும் ஒருவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. 

விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவரான விகாஸ் பிரபாகர் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஹர்ஜித் சிங் லட்டி ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Firing at Kapil Sharma's cafe in Canada, Khalistani terrorist claims responsibility

இதையும் படிக்க :லண்டன் லார்ட்ஸ் திடல் எம்சிசி அருங்காட்சியகத்தில் சச்சின் உருவப்படம் திறப்பு!

விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அகமதாபாத் ஏ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க