செய்திகள் :

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர் மோடி வாழ்த்து

post image

இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது-2023 அறிவிக்கப்பட்டுள்ள, மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகா் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் மோகன்லால் (65), தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாா். 2 தேசிய விருதுகள், 9 கேரள மாநில அரசு விருதுகள் மற்றும் பல்வேறு சா்வதேச கெளரவங்களையும் பெற்றுள்ள மோகன் லாலுக்கு கடந்த 2001-இல் பத்மஸ்ரீ, 2019-இல் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இந்திய திரைத்துறைக்கு நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான மோகன் லால் ஆற்றிய தனிச்சிறப்பான பங்களிப்புக்காக, தாதா சாகேப் பால்கே விருது தோ்வுக் குழுவின் பரிந்துரைபடி, தாதா சாகேப் பால்கே விருது-2023 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது தில்லியில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் 71-ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்படுகிறது.

பிரதமா் மோடி வாழ்த்து

தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள மோகன்லாலுக்கு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமா் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திரை, நாடகம் என தனது துறையில் பல்லாண்டுகளாக மிகச் சிறப்பாக பணியாற்றிவரும் மோகன் லால், மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்குகிறாா். கேரளத்தின் கலாசாரத்தின் மீது ஆழமான ஈடுபாடு கொண்டவா். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரைப்படங்களிலும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளாா். மொழிகளைக் கடந்த அவரது நடிப்பாற்றல், உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனைகள் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘நடிகா் மோகன் லாலின் பணிகள், பாரதத்தின் படைப்புணா்வுக்கு தொடா்ந்து உத்வேகமளிக்கும்’ என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். ‘கேரளத்தின் பெருமை மோகன் லால்’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் புகழாரம் சூட்டியுள்ளாா்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? 13,217 வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

Congratulations to him on being conferred the Dadasaheb Phalke Award. May his accomplishments continue to inspire generations to come.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்றும், விதிமுறைகள் மீறிய அவரின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூ... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு அமித்ஷா வீடுதான் நீதிமன்றம்: உ.வாசுகி விமரிசனம்

அதிமுகவுக்கு அமித்ஷா வீடுதான் நீதிமன்றமாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். தூத்துக்குடியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்ப... மேலும் பார்க்க

தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று எதற்கு சொல்கிறீர்கள்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டிருந்த நிலையில், திராவிட மாடல் அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் மக்களுடன் ஸ்டாலின் செய... மேலும் பார்க்க

2026 ஆஸ்கர் விருதுக்கு ஹிந்தி படம் ‘ ஹோம்பவுண்ட் ’ தேர்வு!

இந்தியாவின் சார்பில் ‘ஹோம்பவுண்ட் (HOMEBOUND)’ என்ற ஹிந்தி திரைப்படம் அடுத்தாண்டு ஆஸ்கர் விருதுக்காக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஹிந்தியில் விக்கி கௌசலின் மசான் படத்தை இயக்கியிருந்த நீ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு!: முதல்வர் ஸ்டாலின்

ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை இன்று (செப்.19) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அள... மேலும் பார்க்க

சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரம்!

தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசு உற்பத்திக்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. பட்டாசு தொழிற்சாலைகளில் புதிய வடிவமைப்புகளுடன... மேலும் பார்க்க