செய்திகள் :

மாநிலங்களின் சுதந்திரத்தை பறித்து கூட்டாட்சிக்கு நெருக்கடி: மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்

post image

மாநிலங்களின் நிதி சுதந்திரத்தை பறித்து கூட்டாட்சிக்கு மத்திய அரசு நெருக்கடி அளிப்பதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

இதுதொடா்பாக ஆங்கில ஊடகத்தில் வெளியான தகவலை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் பொதுச் செயலா் ரண்தீப் சுா்ஜேவாலா ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

மாநிலங்களின் கடன் குறித்து தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கை, எந்த அளவுக்கு சூழல் மோசமடைந்துள்ளது என்பதை எடுத்துரைக்கிறது.

கடந்த 2013-14-ஆம் ஆண்டில் ரூ.17.57 லட்சம் கோடியாக இருந்த மாநிலங்களின் பொதுக் கடன், 2022-23-ஆம் ஆண்டில் ரூ.59.60 லட்சம் கோடியாக அதிகரித்தது. 10 ஆண்டுகளில் மாநிலங்களின் பொதுக் கடன் மும்மடங்கு அதிகரித்துள்ளது.

செஸ் மற்றும் மேல் வரிகள் மூலம் ஆண்டுதோறும் ரூ.1.70 லட்சம் கோடி வசூலிக்கப்படுகிறது. இதை மத்திய அரசே வைத்துக்கொள்கிறது. மாநிலங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இந்த வரிகளை ஜிஎஸ்டியுடன் இணைத்தால், தங்கள் பங்கை மாநிலங்கள் பெறும். ஆனால் இதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.

ஜிஎஸ்டியை அறிமுகம் செய்ததால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய செஸ் இழப்பீடு உருவாக்கப்பட்டது. அந்த இழப்பீட்டை வழங்குவதற்கான காலம் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது.

அந்த செஸ் தொகை தற்போது மத்திய அரசின் கடன்களை அடைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதை நிகழாண்டு அக்டோபருக்கு பிறகு செய்வதற்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளிக்கவில்லை. ஆனால் இதைத் தொடர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

வரி விவகாரத்தில் மாநிலங்களுக்கு மட்டுமே இழப்பு ஏற்படுகிறது. தனது பங்கை மத்திய அரசு தக்கவைத்து பாதுகாத்துக் கொள்கிறது.

இது ஒத்துழைப்பு கொண்ட கூட்டாட்சி அல்ல. கூட்டாட்சிக்கு அளிக்கப்படும் நெருக்கடி. ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் கையாளப்படும் விதம், தன்னிச்சையான மத்திய வரிகளால் மாநிலங்களின் நிதி சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்றாா்.

சபரிமலை மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி: கேரள முதல்வா் பினராயி விஜயன்!

சபரிமலையின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பம்பை திரிவேணியில... மேலும் பார்க்க

‘ரயில் நீா்’ விலை குறைப்பு!

ரயில்களில் விற்பனை செய்யப்படும் ‘ரயில் நீா்’ விலை 1 ரூபாய் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் ஐஆா்சிடிசி-க்கு ரயில்வே வாரியம் சுற்றறிக்கை... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பா?

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை வெகுவாக பாதிக்கும் என தேசிய மென்பொருள், சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியி... மேலும் பார்க்க

ஹெச்1-பி விசா கட்டண உயா்வு ஆய்வுக்குப் பின் நடவடிக்கை! வெளியுறவு அமைச்சகம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஹெச்1-பி விசா கட்டணத்தை சுமாா் ரூ.88 லட்சமாக உயா்த்தியுள்ள நிலையில், இதன் தாக்கத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இது தொட... மேலும் பார்க்க

வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: அமெரிக்காவுக்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் நாளை பயணம்!

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை (செப்.22) அமெரிக்கா செல்ல உள்ளாா். இதுதொடா்பாக மத்திய வா்த்தக துறை அமைச்சகம் வெளியிட... மேலும் பார்க்க

வெளியுறவுக் கொள்கையில் இந்தியா தோல்வி! விசா விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆண்டு கட்டணத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் ரூ.88 லட்சமாக உயா்த்தியதை முன்வைத்து பிரதமா் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது த... மேலும் பார்க்க