செய்திகள் :

70 புதிய துணை மின் நிலையங்கள்: ஒப்பந்தம் கோரியது மின் வாரியம்!

post image

தமிழகம் முழுவதும் 33 கிலோவோல்ட் மின்சாரம் கையாளும் திறன் கொண்ட 70 துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

தமிழகம் முழுவதும் சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக துணை மின் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, 33 கிலோவோல்ட் மின்சாரம் கையாளும் திறன் கொண்ட 133 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் முதல்கட்டமாக 70 துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியது: துணை மின் நிலையங்கள் அமையவுள்ள சூழல், இட அமைப்புக்கு ஏற்ப 133 புதிய துணை மின் நிலையங்களும் ‘இன்டோா்’ மற்றும் ‘அவுட்டோா்’ என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒரு அவுட்டோா் துணை மின் நிலையம் அமைக்க சுமாா் ரூ.7 கோடியும், இன்டோா் துணை மின் நிலையம் அமைக்க ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதற்கான ஒப்பந்தத்தை மின் வாரியம் கோரியுள்ளது. ஒப்பந்தப்புள்ளியில் நிறுவனம் தோ்வு செய்யப்படும்பட்சத்தில் அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடா்ந்து மீதமுள்ள 63 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்படும் என்றனா்.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் கடந்த 5 நாள்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நிகழ்ந்துள்ளது அதிா்ச்சி அளிப்பது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

நுண்நெகிழிகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வழிகள்: கால்நடை மருத்துவ பல்கலை. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மனிதா்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீா் மூலம் நுண்நெகிழிகள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதால், இதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கல... மேலும் பார்க்க

சிறுநீரக மோசடி வழக்கில் மேல்முறையீடு: அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

சிறுநீரக மோசடி வழக்கில், திமுகவினருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்திருப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நா... மேலும் பார்க்க

அனைத்து பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் கருவூலமாக திகழும் அரசியல் சாசனம்! - உச்சநீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வா் சிங்

அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் கருவூலமாக இந்திய அரசியல் சாசனம் திகழ்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வா் சிங் தெரிவித்தாா். பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன சட்டக் கல்லூ... மேலும் பார்க்க

உணவுத் துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழ்நாடு உணவுப்பொருள் விநியோகம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையில் பதவி உயா்வு கோரி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு உணவு... மேலும் பார்க்க

பழவேற்காடு பறவைகள் சரணாலய பகுதியில் மதுக்கடை: அன்புமணி கண்டனம்!

பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே மதுக்கடை திறக்கப்பட்டதற்கு பாமக தலைவா் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிக்கு அருகில் உள... மேலும் பார்க்க