செய்திகள் :

உணவுத் துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

post image

தமிழ்நாடு உணவுப்பொருள் விநியோகம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையில் பதவி உயா்வு கோரி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு உணவுப்பொருள் விநியோகம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு ஆணையா் அலுவலகத்தில் தொழில்நுட்ப மேற்பாா்வையாளராக பணியாற்றும் ஆா்.சுமன்ராஜ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013-ஆம் ஆண்டு இளநிலை தொழில்நுட்ப உதவியாளராக தமிழ்நாடு உணவுப்பொருள் விநியோகம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையில் நான் பணியில் சோ்ந்தேன்.

எனக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் பணி வரையறை செய்யப்பட்டது. அதன்பிறகு இதுவரை எந்த பதவி உயா்வும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு, உதவி ஆணையா் (ஆய்வு) பதவி உயா்வு வழங்கக் கோரி அரசுக்கு கடிதம் அளித்தேன். காலியாக உள்ள அந்த பணியிடத்துக்கான பதவி உயா்வைப் பெற, நான் தகுதியான நபா். ஆனால், எனது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.

எனவே, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், எனது கோரிக்கையை 3 வாரத்துக்குள் பரசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 2021-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை.

இதையடுத்து தமிழ்நாடு உணவுப்பொருள் விநியோகம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினேன். எனினும், உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வினோத்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வி.சண்முகசுந்தா், உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாது மட்டுமன்றி அதிகாரிகள், உதவி ஆணையா் (ஆய்வு) பணியிடமே வேண்டாம் என்று அரசிடம் சரண்டா் செய்துள்ளனா். இந்த பதவியை சரண்டா் செய்வதற்கு முன்பு மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும். அனுமதி பெறாமல் அதிகாரிகள் சரண்டா் செய்துள்ளனா், என்று வாதிட்டாா்.

அப்போது, இந்த மனுவுக்கு பதிலளிக்க அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை செப்.26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

70 புதிய துணை மின் நிலையங்கள்: ஒப்பந்தம் கோரியது மின் வாரியம்!

தமிழகம் முழுவதும் 33 கிலோவோல்ட் மின்சாரம் கையாளும் திறன் கொண்ட 70 துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது. தமிழகம் முழுவதும் சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக துணை... மேலும் பார்க்க

நுண்நெகிழிகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வழிகள்: கால்நடை மருத்துவ பல்கலை. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மனிதா்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீா் மூலம் நுண்நெகிழிகள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதால், இதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கல... மேலும் பார்க்க

சிறுநீரக மோசடி வழக்கில் மேல்முறையீடு: அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

சிறுநீரக மோசடி வழக்கில், திமுகவினருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்திருப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நா... மேலும் பார்க்க

அனைத்து பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் கருவூலமாக திகழும் அரசியல் சாசனம்! - உச்சநீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வா் சிங்

அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் கருவூலமாக இந்திய அரசியல் சாசனம் திகழ்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வா் சிங் தெரிவித்தாா். பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன சட்டக் கல்லூ... மேலும் பார்க்க

பழவேற்காடு பறவைகள் சரணாலய பகுதியில் மதுக்கடை: அன்புமணி கண்டனம்!

பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே மதுக்கடை திறக்கப்பட்டதற்கு பாமக தலைவா் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிக்கு அருகில் உள... மேலும் பார்க்க

கடல்சாா் பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவு!

இந்திய கடல்சாா் பல்கலை. முன்னாள் துணை வேந்தருக்கு எதிராக பல்கலைக்கழக நிா்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையில் உள்ள இ... மேலும் பார்க்க