செய்திகள் :

`நடிகர் ராஜனுடனான காதல்’ - மறைந்த பழம்பெரும் நடிகை புஷ்பலதா நினைவுகள் பகிரும் எஸ்.பி.முத்துராமன்

post image

பழம் பெரும் நடிகையும், நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா, வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். தமிழில் 'கொங்கு நாட்டு தங்கம்' படத்தின் மூலம் அறிமுகமானவர். அதற்கு முன்னரே தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார்.

புஷ்பா

நடிகை புஷ்பலதா தமிழில் 'யாருக்கு சொந்தம்', 'நானும் ஒரு பெண்', 'சிம்லா ஸ்பெஷல்', 'கற்பூரம்', 'பார் மகளே பார்', 'புதுவெள்ளம்', 'சாரதா', 'ஜீவனாம்சம்' உள்பட 100க்கும் மேலான படங்களில் ஹீரோயினாகவும், குணசித்திரமாகவும் நடித்திருக்கிறார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சில படங்களில் நடித்திருப்பதால், புஷ்பலதாவின் நினைவுகள் குறித்து அவரிடம் கேட்டோம்.

''ஏவிஎம். நிறுவனம் தயாரிப்பில் திருலோகசந்தர் இயக்கிய 'நானும் ஒரு பெண்' படத்தில் தான் ராஜன் அறிமுகமானார். அதில் இருந்து தான் அவரை எல்லோரும் ஏவிஎம். ராஜன் என சொல்ல ஆரம்பித்தனர். அந்த படத்தின் நாயகி புஷ்பலதா. இந்த படத்திற்கு முன்னரே அவர் 'ஆலயமணி', ''போலீஸ்காரன் மகள்', 'சாரதா', 'பணம் பந்தியிலே' என பல படங்களில் நடித்திருக்கிறார். 'நானும் ஒரு பெண்' படத்தில் புஷ்பலதா மாலதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ராஜனுக்கும் புஷ்பலதாவிற்கும் இந்த படத்தில் தான் காதல் அரும்பியது. அதன் பின் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

எஸ்.பி. முத்துராமன்

புஷ்பலதா, கதாநாயகி, குணசித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். எனது இயக்கத்தில் 'ஊருக்கு உபதேசம்', ''சகலகலா வல்லவன்' என சில படங்களில் நடித்திருக்கிறார். திறமையான நடிகை. அவருடன் பணியாற்றியது இனிய தருணங்கள். எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்கிறார் எஸ்.பி.முத்துராமன்.

மறைந்த புஷ்பலதா, புஷ்பாராஜன் என்ற பெயரில் சிவாஜி நடித்த 'லாரி டிரைவர் ராஜாகண்ணு' உள்பட சில படங்களை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

BADGIRL: விருது வென்ற வெற்றிமாறன் உதவியாளர் படம்; திரைப்பட விழாவில் கவன ஈர்ப்பு!

வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் `பேட் கேர்ள்' திரைப்படம் இந்தாண்டு ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.இப்படத்தை அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்கிறார். அங்கு இ... மேலும் பார்க்க

``விஜய்யை வச்சு ரூ.300 கோடிக்குப் படமெடுத்து ரூ.500 கோடி எடுக்குறது பெரிய விஷயமில்ல" - சுசீந்திரன்

"2K லவ் ஸ்டோரி படத்துல ஒரு தனித்துவமான க்ளைமாக்ஸ் காட்சி இருக்கு. எப்படி 'ஆதலால் காதல் செய்வீர்' படத்துல அந்த பசங்க வாழ்கையோட கதை பயணிக்குமோ அதே மாதிரி தான் இந்தப் படத்துலயும் பசங்க வாழ்க்கைகூடவே பயணம... மேலும் பார்க்க

Amaran 100: `முகுந்தை நிலையாகக் கொண்டுள்ள இந்துவின் உலகம்தான் அமரன்' -ராஜ்குமார் பெரியசாமி உருக்கம்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கதில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் 'அமரன்'.ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். ம... மேலும் பார்க்க

ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை... காரணம் என்ன?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் காஞ்சனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடா என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்தர் போன்ற முன... மேலும் பார்க்க

``என் மனைவிக்கு அதை ஒருபோதும் பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன்!'' - நடிகர் பொன்வண்ணனுடன் ஒரு சிட் சாட்!

சின்னத்திரையிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் பொன்வண்ணன்.சமீபத்தில் `உப்பு புளி காரம்' வெப் சீரிஸ் மூலம் பல குடும்பங்களுக்கும் ஃபேவரைட்டானவர் தற்போது புதியதாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கெட... மேலும் பார்க்க