நடிகை சரோஜா தேவிக்கு நாளை இறுதிச் சடங்கு!
மல்லேஸ்வரம்: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறவிருக்கிறது.
தமிழ், கன்னடம் உள்பட 4 மொழிகளில், சுமார் 200க்கும மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை ரோஜா தேவி உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டம் பெற்ற நடிகை சரோஜா தேவி இன்று காலை காலமானார். அவரது உடல், கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
காலை முதலே அவரது மறைவுச் செய்தியறிந்த மக்கள் ஏராளமானோர், சரோஜா தேவி இல்லத்துக்கு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை முற்பகல் 11 மணி வரை மல்லேஸ்வரம் வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டு, மல்லேஸ்வரம் அருகே கொடிஹள்ளி தோட்டத்தில் அவரது கணவரின் கல்லறைக்கு அருகே இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்திரை ஜாம்பவான்கள் மூவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என மூவருக்குமே ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் உள்ளிட்ட பல்வேறு சிறந்த விருதுகளையும், தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட அரசிகளின் சிறந்த விருதுகளையும் பெற்றவர் நடிகை சரோஜா தேவி.