செய்திகள் :

நடிப்புக்கு உயரம் தடையா? தாமதமாகும் வாய்ப்பு குறித்து குஷ்பு மகள் உருக்கம்!

post image

நடிகைக்காக வரையறைக்குள் தான் இல்லை என நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா தெரிவித்துள்ளார்.

உயரமாக இருப்பதால், படவாய்ப்புகள் வருவதற்குத் தாமதமாவதாகவும், முதல் வாய்ப்புக்காக நீண்ட நாள்கள் காத்திருப்பதாகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு - இயக்குநர் சுந்தர். சி, தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் அவந்திகா. லண்டனில் முறைப்படி நடிப்பைப் பயின்ற இவர், சினிமா வாய்ப்புக்காகத் தன்னை தயார்படுத்தி வருகிறார்.

சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல், சிறந்த நடிகையாக வர வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்ட அவந்திகா, சினிமாவில் பிரபலங்களின் வாரிசாக இருந்தும் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காதது ஏன்? என்பது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் குறிப்பிட்டுள்ளார்.

அவந்திகா

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ''எந்தவொரு மொழியிலும் நடிப்பதற்கு நான் தயாராக உள்ளேன். நல்ல கதைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவை நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன்.

நடிகை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை இங்கு உள்ளது. அதற்குள் நான் இல்லை என்பது எனக்குத் தெரியும். என் உயரமே எனது நடிப்பு வாய்ப்புக்குத் தடையாக உள்ளது. அதிகப்படியான உயரத்தால் எனது முதல் வாய்ப்புக்காக நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

என்னுடைய பதின்ம பருவத்தில் அதிகப்படியான உடல் எடையுடன் இருந்தேன். கண்ணாடி அணிந்திருந்தேன். ஆனால், அவற்றில் இருந்து மெல்ல மெல்ல நான் என்னைத் தயார்படுத்திவருகிறேன்.

எனது பெற்றோர் சினிமாவில் நட்சத்திரங்களாக இருப்பதால் என்னால் எளிமையாக வாய்ப்பை உருவாக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், அதனைச் செய்ய நான் விரும்பவில்லை. என் பெற்றோருக்கும் என் முயற்சியில்தான் மகிழ்ச்சி அடைகின்றனர்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | குஷ்பு நடிக்கும் புதிய தொடரின் பெயர் அறிவிப்பு!

ரூ.200 கோடி வசூலித்த குட் பேட் அக்லி!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்பட... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.சனிக்கிழமை (19.04.2025)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்திர... மேலும் பார்க்க

அரையிறுதியில் மான்செஸ்டா் யுனைடெட் , டாட்டன்ஹாம்

யூரோப்பா கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதிக்கு மான்செஸ்டா் யுனைடெட், டாட்டன்ஹாம், அதலெட்டிக் பில்போ அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் நடைபெறும் யுரோப்பா கால்ப... மேலும் பார்க்க

ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 56 போ் இந்திய அணி பங்கேற்பு

அம்மான் தலைநகா் ஜோா்டானில் நடைபெறவுள்ள ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்க 56 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. உலக பாக்ஸிங் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டபின் ஆசிய குத்த... மேலும் பார்க்க

முதலிடத்தை கைப்பற்ற குஜராத்-டெல்லி இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் அகமதாபாதில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. டெல்லி அணி 6 ஆட்டங்கள் முடிவில் 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குஜராத் ... மேலும் பார்க்க

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி: அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரா் பென் ஷெல்டன், ஆா்ஜென்டீனா வீரா் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றுள்ளனா். ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்று வரும் பிஎம்டபிள்யு ஏட... மேலும் பார்க்க