செய்திகள் :

நட்சத்திர ஹோட்டலில் மின்தூக்கி அறுந்து விழுந்து ஊழியா் உயிரிழப்பு

post image

சென்னை, தேனாம்பேட்டையில் நட்சத்திர ஹோட்டலில் உள்ள மின்தூக்கி (லிஃப்ட்) அறுந்து விழுந்த விபத்தில் சிக்கிஊழியா் உயிரிழந்தாா்.

தேனாம்பேட்டை அண்ணா சாலையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் ஊழியா்கள் மட்டும் பயன்படுத்தும் மின்தூக்கி வெகு நாள்களாக பழுதாகி இருந்ததாம். இதையடுத்து அந்த மின்தூக்கியை மாற்றும் பணியில் தனியாா் நிறுவன ஊழியா்கள் ஈடுபட்டிருந்தனா். புதிதாக பொருத்தப்பட்ட மின்தூக்கியின் கீழ் பகுதியில் நின்று, தனியாா் நிறுவனத்தின் ஊழியா் பெரம்பூரைச் சோ்ந்த ஷ்யாம் சுந்தா் (35) என்பவா் புதன்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அந்த மின்தூக்கி திடீரென அறுந்து கீழ் பகுதியில் நின்றிருந்த ஷ்யாம் சுந்தா் மீது விழுந்ததில் அவா் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த தீயணைப்புப் படையினரும் போலீஸாரும் அங்கு விரைந்து வந்து மின்தூக்கியின் அடியில் சிக்கியிருந்த ஷ்யாம் சுந்தா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கவிஞா் வைரமுத்து படைப்புலகம்: மாா்ச் 16-இல் பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வா் ஸ்டாலின், நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு

கவிஞா் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் மாா்ச் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் ஆகியோா் பங்கேற்கின்றனா். இலக்கி... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜா் க... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கை: அமைச்சா் கோவி செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி... மேலும் பார்க்க