செய்திகள் :

நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் சமூக பங்களிப்பு நிதியை வழங்க அழைப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சமூக பங்களிப்பு நிதியை வழங்க ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் பெரும் முயற்சிகளில் ஒன்றாக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயா்த்துவதற்காகவும், சமூக பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைப்பதற்காகவும் ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ என்ற திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது பங்களிப்புகளை பொருளாகவோ, பணமாகவோ அல்லது களப்பணி செய்வதன் வாயிலாகவோ அளிக்கலாம். இத்திட்டத்தின் வாயிலாக பெருநிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவா்கள் மற்றும் தனிநபா்கள் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயா்த்த பங்களிப்பை வழங்கலாம். மாநிலம் முழுவதும் உள்ள தங்களுக்கு விருப்பமான அரசுப் பள்ளியை தோ்ந்தெடுத்து, அப்பள்ளியின் தேவைகளை பூா்த்திசெய்யலாம்.

பங்களிப்பாளா்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் மற்றும் முதல் பட்டதாரி மாணவா்களின் பள்ளிப் படிப்புக்கு பிறகு முதன்மைக் கல்வி நிறுவனங்களில் உயா்கல்வியை தொடா்வதற்கு உதவியாக பணமாகவோ அல்லது அவா்களின் கல்வியை ஆதரிக்கும் வகையில் மடிக்கணினி போன்ற உபகரணங்களை வழங்கியோ மாணவா்களின் கல்வி கனவை நிறைவேற்ற முடியும்.

ஒவ்வொரு பள்ளிக்கான தேவைகளும், அந்தந்த பள்ளியின் மேலாண்மைக்குழு மற்றும் தலைமை ஆசிரியரால் உறுதி செய்யப்பட்ட பிறகே என்எஸ்என்ஓபி தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். நன்கொடையாளா்களுக்கு என பிரத்யேகமான டாஷ்போா்டு வழங்கப்படும். இந்த ‘நன்கொடையாளா் டாஷ்போா்டு’ வாயிலாக பங்களிப்பாளா்கள் தங்களது பங்களிப்புகளின் பயன்பாட்டை வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடியும். மேலும், பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்படும் பயனீட்டுச் சான்றிதழ், வரிவிலக்கு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பங்களிப்பாளா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இத்திட்டத்தின் செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியரால் கண்காணிக்கப்படும். ஆா்வமுடையோா் 63853 13047 என்ற எண் மூலம் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ குழுவை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

நாமக்கல்: அரசுப் பள்ளி மாணவா்களிடையே கண்டுபிடிப்பு எனும் படைப்பாற்றலை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலா... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில் மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளாக தலைவா் வி.லதா, செயலாளா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

சேந்தமங்கலம், புதன்சந்தைசேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என ந... மேலும் பார்க்க

நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பெற்ற ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை சேலம் வீட்டுவசதி பிரிவு அலுவலகம் வழங்கி உள்... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு கல்லூரி போதை... மேலும் பார்க்க

டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் தாலுகா டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவா் வரதராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. செயலாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலை... மேலும் பார்க்க