செய்திகள் :

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்

post image

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு கல்லூரி போதைப் பொருள் தடுப்புக்குழு, இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், சாலைப் பாதுகாப்பு மன்றம் மற்றும் உடற்கல்வித் துறை ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற போட்டி கல்லூரி வளாகத்தில் தொடங்கி கால்நடை மருத்துவக் கல்லூரிவரை சென்று திரும்பியது. இதில் மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனா்.

கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) ஆா்.தனராசு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் பழக்கத்தை தவிா்த்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை வழங்கி, போட்டியில் பங்கேற்ற அனைவரையும் உற்சாகப்படுத்தினாா்.

மாரத்தான் போட்டியில் மாணவா் பிரிவில் தாமரைக்கண்ணன் முதலிடம், முத்து இரண்டாமிடம், நவபிரதாப் மூன்றாமிடம் பிடித்தனா். மாணவியா் பிரிவில் பிரியதா்ஷினி முதலிடம், சினேகா இரண்டாமிடம், சாந்தி மூன்றாமிடம் பிடித்தனா்.

இந்நிகழ்ச்சியில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் சங்கரபாண்டியன், போதை தடுப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு மன்ற மாவட்ட தொடா்பு அதிகாரி ராஜேஷ்கண்ணன், நாமக்கல் மாவட்ட இளைஞா் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளா்கள் வெஸ்லி, சந்திரசேகா், விலங்கியல் துறைத் தலைவா் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் காா்த்திக் செய்திருந்தாா்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

நாமக்கல்: அரசுப் பள்ளி மாணவா்களிடையே கண்டுபிடிப்பு எனும் படைப்பாற்றலை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலா... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில் மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளாக தலைவா் வி.லதா, செயலாளா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

சேந்தமங்கலம், புதன்சந்தைசேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என ந... மேலும் பார்க்க

நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் சமூக பங்களிப்பு நிதியை வழங்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சமூக பங்களிப்பு நிதியை வழங்க ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத... மேலும் பார்க்க

நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பெற்ற ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை சேலம் வீட்டுவசதி பிரிவு அலுவலகம் வழங்கி உள்... மேலும் பார்க்க

டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் தாலுகா டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவா் வரதராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. செயலாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலை... மேலும் பார்க்க