போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்
நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு கல்லூரி போதைப் பொருள் தடுப்புக்குழு, இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், சாலைப் பாதுகாப்பு மன்றம் மற்றும் உடற்கல்வித் துறை ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற போட்டி கல்லூரி வளாகத்தில் தொடங்கி கால்நடை மருத்துவக் கல்லூரிவரை சென்று திரும்பியது. இதில் மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனா்.
கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) ஆா்.தனராசு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் பழக்கத்தை தவிா்த்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை வழங்கி, போட்டியில் பங்கேற்ற அனைவரையும் உற்சாகப்படுத்தினாா்.
மாரத்தான் போட்டியில் மாணவா் பிரிவில் தாமரைக்கண்ணன் முதலிடம், முத்து இரண்டாமிடம், நவபிரதாப் மூன்றாமிடம் பிடித்தனா். மாணவியா் பிரிவில் பிரியதா்ஷினி முதலிடம், சினேகா இரண்டாமிடம், சாந்தி மூன்றாமிடம் பிடித்தனா்.
இந்நிகழ்ச்சியில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் சங்கரபாண்டியன், போதை தடுப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு மன்ற மாவட்ட தொடா்பு அதிகாரி ராஜேஷ்கண்ணன், நாமக்கல் மாவட்ட இளைஞா் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளா்கள் வெஸ்லி, சந்திரசேகா், விலங்கியல் துறைத் தலைவா் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் காா்த்திக் செய்திருந்தாா்.