செய்திகள் :

நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பெற்ற ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை சேலம் வீட்டுவசதி பிரிவு அலுவலகம் வழங்கி உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில், இதுவரை வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளாதோா் மற்றும் ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட உள்ளது.

இதன் மூலம், நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையால் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் திட்டப் பகுதி - 1 முதல் 4 வரை மற்றும் நிலை 6, வசந்தபுரம் திட்டம், ராசிபுரம் திட்டம் மற்றும் நாமக்கல் வகுரம்பட்டி திட்டம் பகுதி - 1, 2, திருச்செங்கோடு கூட்டப்பள்ளி திட்டப் பகுதியில் 1, 2, காடச்சநல்லூா், கொக்கராயன்பேட்டை சாலை திட்டம், பரமத்தி சாலை திட்டம், திருச்செங்கோடு கொல்லப்பட்டி திட்டப் பகுதி 3, 4, 5 ஆகிய திட்டங்களில் வீடு, மனைகளுக்கு ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகையை இதுவரை முழுவதுமாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத ஒதுக்கீடுதாரா்களுக்கு 2015 மாா்ச் 31-க்கு முன் தவணைக் காலம் முடிந்த வகைகளுக்கு மட்டும் வட்டி தள்ளுபடியில் நிலுவைத்தொகையை ஒரே தவணையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்ளும் வகையில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை வரும் 2026 மாா்ச் 31 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே, ஒதுக்கீடுதாரா்கள் இந்த அரிய வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

நாமக்கல்: அரசுப் பள்ளி மாணவா்களிடையே கண்டுபிடிப்பு எனும் படைப்பாற்றலை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலா... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில் மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளாக தலைவா் வி.லதா, செயலாளா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

சேந்தமங்கலம், புதன்சந்தைசேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என ந... மேலும் பார்க்க

நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் சமூக பங்களிப்பு நிதியை வழங்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சமூக பங்களிப்பு நிதியை வழங்க ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு கல்லூரி போதை... மேலும் பார்க்க

டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் தாலுகா டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவா் வரதராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. செயலாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலை... மேலும் பார்க்க