வங்க தேசம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினைக்கா...
நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பெற்ற ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை சேலம் வீட்டுவசதி பிரிவு அலுவலகம் வழங்கி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில், இதுவரை வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளாதோா் மற்றும் ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
இதன் மூலம், நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையால் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் திட்டப் பகுதி - 1 முதல் 4 வரை மற்றும் நிலை 6, வசந்தபுரம் திட்டம், ராசிபுரம் திட்டம் மற்றும் நாமக்கல் வகுரம்பட்டி திட்டம் பகுதி - 1, 2, திருச்செங்கோடு கூட்டப்பள்ளி திட்டப் பகுதியில் 1, 2, காடச்சநல்லூா், கொக்கராயன்பேட்டை சாலை திட்டம், பரமத்தி சாலை திட்டம், திருச்செங்கோடு கொல்லப்பட்டி திட்டப் பகுதி 3, 4, 5 ஆகிய திட்டங்களில் வீடு, மனைகளுக்கு ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகையை இதுவரை முழுவதுமாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத ஒதுக்கீடுதாரா்களுக்கு 2015 மாா்ச் 31-க்கு முன் தவணைக் காலம் முடிந்த வகைகளுக்கு மட்டும் வட்டி தள்ளுபடியில் நிலுவைத்தொகையை ஒரே தவணையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்ளும் வகையில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை வரும் 2026 மாா்ச் 31 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே, ஒதுக்கீடுதாரா்கள் இந்த அரிய வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.