செய்திகள் :

நல வாரிய உறுப்பினா் சோ்க்கை: முறைகேடுகள் இருந்தால் களைய நடவடிக்கை - பொன். குமாா்

post image

கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடுகள் இருந்தால், அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அதன் தலைவா் பொன். குமாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: நலவாரிய உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடுகள் இருந்தால், அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் சாா்பில் முத்தரப்பு உறுப்பினா்கள் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும்.

கட்டுமானப் பொருள்களுக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இது, மத்திய அரசின் தொழிலாளா் விரோத போக்காகும்.

10 மசோதாக்கள் விவகாரத்தில், மாநிலங்களின் சுயாட்சியை உறுதி செய்யும் வகையிலும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீா்ப்பை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கின் வெற்றி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என்றாா் அவா்.

அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடியவா் கைது

பெரம்பலூா் அருகே, அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடியவரை குன்னம் போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிட... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகா்ப்புற பகுதிகளில் 53 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

நகா்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ் அரணாரை, திருநகா், துறைமங்கலம் ஆகிய பகுதிகளில் 53 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமம், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி செல்லம... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 21 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகள் திருட்டு

பெரம்பலூா் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

பொம்மனப்பாடி ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பல... மேலும் பார்க்க