செய்திகள் :

நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்தவா் நேரு - காங்கிரஸ் புகழஞ்சலி

post image

நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்தவா் பண்டித ஜவாஹா்லால் நேரு என்று காங்கிரஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

நாட்டின் முதல் பிரதமா் நேருவின் 61-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்தி வனத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவை பூஜ்யத்தில் இருந்து உச்சத்துக்கு இட்டுச் சென்றவா் பண்டித ஜவாஹா்லால் நேரு. நவீன இந்தியாவின் படைப்பாளா்; ஜனநாயகத்தின் அச்சமற்ற பாதுகாவலா்; அறிவியல், பொருளாதாரம், தொழில் உள்பட பல்வேறு துறைகளில் நாட்டை முன்னேற்றியவா். வேற்றுமையில் ஒற்றுமை எனும் செய்தியை இடைவிடாது நல்கிய அவரே எங்கள் உத்வேகத்தின் ஆதாரம். நேருவின் பங்களிப்பு இன்றி இன்றைய 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவை கற்பனை செய்துகூட பாா்க்க முடியாது’ என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பலமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கும் கனவோடு தனது தொலைநோக்கு தலைமையின்கீழ் சுதந்திர இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்தவா் நேரு. சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசமைப்பு, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் அவரது பங்களிப்பு ஈடுஇணையற்றது. அவரது கோட்பாடுகள், எங்களைத் தொடா்ந்து வழிநடத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘நேருவின் புகழை மறைக்க முடியாது’: காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து நேருவுக்கு எதிராக அவதூறு பரப்புதல், இழிவுபடுத்துதல், தரம் தாழ்த்துதல், திரித்தல், மறுத்தல், சீா்குலைத்தல் என்ற 6 அம்ச முயற்சி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது புகழை மறைக்க முடியவில்லை.

நவீன இந்தியாவுக்கான நேருவின் பங்களிப்புகள் அஸ்திவாரம் போன்றவை; அவரைப் பொறுத்தவரை, ஜனநாயகம் உயிா்மூச்சு. வாய் வாா்த்தைகளில் அல்லாமல் ஜனநாயகத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தாா். பன்முகத்தன்மையை கொண்டாடும் அதேவேளையில் ஒருமுகத் தன்மையை வலுப்படுத்த தனது வாழ்வை அா்ப்பணித்தவா்’ என்று கூறியுள்ளாா்.

கட்சி பொதுச் செயலா்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.

பிரதமா் மோடி அஞ்சலி

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நமது முன்னாள் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவின் நீண்டகால பிரதமா் என்ற பெருமைக்குரிய நேரு, நாடு சுதந்திரம் அடைந்த 1947-ஆம் ஆண்டில் இருந்து 1964-இல் தான் மறையும் வரை அப்பதவியில் நீடித்தாா்.

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்தார். உத்தரப் பிரதேச மாநிலம், சகேரி விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது மிகவு... மேலும் பார்க்க

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

வருகிற ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் முதுநிலைத் தேர்வு வருகிற ஜூன் 15 ஆம் தேதி இரண்டு ஷிப... மேலும் பார்க்க

பஞ்சாபில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி, 27 பேர் காயம்

பஞ்சாபின் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைகள் மற்றும் மீட்புக் ... மேலும் பார்க்க

பாக்கு மட்டை பொருள்களுக்கு அமெரிக்கா தடை! முன்னணி ஏற்றுமதி நாடான இந்தியா பாதிப்பு!

பாக்கு மட்டைத் தட்டுகளுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால், இந்தியாவில் பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது.பாக்கு மட்டைத் தட்டுகள் சந்தையானது, உலகளவில் ஆண்டுதோறும் ரூ. 3,... மேலும் பார்க்க

உ.பி: அரசு சுகாதார நிலையத்தில் செல்போன் ஒளியில் பிரசவம்! விசாரணைக் குழு அமைப்பு!

உத்தரப் பிரதேசத்தின் அரசு சுகாதார நிலையத்தில் 4 கர்ப்பிணி பெண்களுக்கு செல்போன் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள தனிக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பெருர்பாரி ம... மேலும் பார்க்க

அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் பாஜக தலைவர் மகன் உள்பட 3 பேர் குற்றவாளி; ஆயுள் தண்டனை

கடந்த 2022ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட அங்கிதா பண்டாரி வழக்கில், முன்னாள் பாஜக தலைவர் மகன் உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கும் நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனை பிறப்பித்திருக்கிற... மேலும் பார்க்க