செய்திகள் :

நவ கயிலாய கோயில்கள்...

post image

உலகில் சிவலிங்கத்துக்கு பெயர் பெற்ற இடம் இமயமலையில் உள்ள சிவ கயிலாயம். தென் தமிழ்நாட்டில் தாமிரவருணி ஆற்றங்கரையில் நவ கயிலாயம் என ஒன்பது கோயில்கள் உள்ளன.

புண்ணிய மலையான பொதிகை மலையில் தவம் புரிந்து வந்த மாமுனிவர் அகத்தியரின் முக்கிய சீடரான உரோமச முனிவர் தன் குருவின் துணை கொண்டு, சிவனை காட்சி பெற்று முக்தி அடைய விரும்பினார். அதை தெரிந்து

கொண்டு அகத்தியர் அதற்கான வழிமுறைகளைக் கூறினார். அதன்படி, உரோமச முனிவர் தாமிரவருணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி, சிவனை வழிபட்டார். பின்னர், நவகோள்கள் வரிசையில் சிவனை வணங்க முற்பட்டார். எந்தெந்த இடங்களில் வணங்க வேண்டும் என்பதற்கு அடையாளம் காட்டுவதற்காக, தாமிரவருணியில் ஒன்பது மலர்களை அகத்தியர் மிதக்கவிட்டார். அந்த மலர்கள் ஒதுங்கிய தலங்கள் நவ கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது.

பாபநாசம் - சூரியன், சேரன்மகாதேவி - சந்திரன், கோடகநல்லூர்- செவ்வாய், குன்னத்தூர்- ராகு, முறப்பநாடு- குரு, ஸ்ரீவைகுண்டம் - சனி, தென்திருப்பேரை - புதன், ராஜபதி - கேது, சேர்ந்தமங்கலம் - சுக்கிரன்.

பின்னர், உரோமச முனிவர் சிவலிங்கத்தை வைத்து, வணங்கி முக்தி பெற்றார். நாம் எல்லோரும் ஏதாவது ஒரு கிரகங்களின் ஆட்சிக்கு உள்பட்டவர்கள்தான். ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு கிரகங்கள் பெயர்வதையே பெயர்ச்சி என்கின்றனர். நவ கயிலாயங்களைத் தரிசிப்பது வாழ்வில் சிறந்த பலன்களை அளிக்கும்.

- எஸ்.பி.பாலு

நினைத்தது நிறைவேறும்...

தனது தங்கை தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்துவித்து, காலநேமி தேரை ஒட்டிச் சென்றார் கம்சன். அப்போது, "உன் தங்கை வயிற்றில் உதிக்கும் எட்டாவது சிசு உன்னைக் கொல்லும்' என அசரீரி ஒலித்தது. உடனே வசுதேவரையு... மேலும் பார்க்க

தாயே கருமாரி...

ஆதிபரம்பொருளான கருமாரியம்மன் ஒவ்வொரு ஊராக வலம் வந்து, தண்டலம் மயானத்துக்குச் சென்று முதன்முதலில் ஜோதி வடிவமாய் காட்சியளித்தாள். அவ்வூர் "பழந்தண்டலம்' எனப்பட்டது. அங்கிருந்து வேலங்காட்டுக்கு சென்று தன்... மேலும் பார்க்க

சிறகு இல்லாத சிறகிலிநாதர்!

ராமாயணக் காலத்தில், ராமனிடம் சடாயு என்ற கழுகு, சீதை இராவணனால் கொண்டு செல்லப்பட்ட விவரம் கூறுகிறது. "கண்டேன் தேவியை' - ராவணனுடன் சீதையை மீட்கப் போராடி அரக்கன் தன் மந்திர வாளால் சடாயுவின் சிறகை வெட்டி க... மேலும் பார்க்க

இழந்த பதவியை தருபவர்...

முற்காலத்தில் இலஞ்சியை ஆண்டு வந்த பகீரதன், தனது நாட்டில் நிலவிய செல்வ வளத்தால் கர்வம் மிகுந்திருந்தார். ஒருசமயம் அவனது சபைக்கு நாரதர் வந்தபோது, அரசர் உபசரிக்கவில்லை. கோபமுற்ற முனிவர் அங்கிருந்து சென்ற... மேலும் பார்க்க

அறுபடை வீடு கொண்ட திருமுருகா...

முன்பொரு காலத்தில் தேவர்களுக்கு அசுரர்கள் பல தொல்லைகளை அளித்து வந்தனர். அசுரர்களில் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவன். எனவே தேவர்கள் சிவனை வேண்டினர். பிரார்த்தனையை ஏற்ற சிவனும்,... மேலும் பார்க்க

தேசம் போற்றும் தேசிகநாத சுவாமி

சூரைக்குடியில் ஆவுடையநாயகி சமேத தேசிகநாத சுவாமி புகழ்பெற்று விளங்குகிறார். இங்கு காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடைபெறுகிறது."ஒருமுறை பார்வதி தேவியி... மேலும் பார்க்க