செய்திகள் :

சிறகு இல்லாத சிறகிலிநாதர்!

post image

ராமாயணக் காலத்தில், ராமனிடம் சடாயு என்ற கழுகு, சீதை இராவணனால் கொண்டு செல்லப்பட்ட விவரம் கூறுகிறது. "கண்டேன் தேவியை' - ராவணனுடன் சீதையை மீட்கப் போராடி அரக்கன் தன் மந்திர வாளால் சடாயுவின் சிறகை வெட்டி கீழே வீழ்த்திச் சென்றான். குற்றுயிரான சடாயு ராமனின் மடியில் கிடந்து சேதிகள் சொல்லி நிறைவை அடைந்தது. தன் தந்தைக்கு செய்தது போன்று, ராமன் பிதுர்க்கடன் செய்தார். சடாயுவின் ஆன்மா பரிபூரணமடைந்து மகாலிங்கத் திருமேனி தாங்கியது. சிறகு இல்லாததால் "சிறகிலிநாதர்' என அழைக்கப்பட்டது.

ஒருகாலத்தில் இப்பகுதி பஞ்சமாக, வறட்சி மிகுந்த நிலையில் மக்கள் பிரார்த்திக்க பொன் பொழிந்ததால் "சொர்ணமூர்த்தி' என அழைக்கப்பட்டார் என்பதும் மரபு. இதன் நினைவாக செம்பொன்மாரி என்ற கிராமமும் இப்பகுதியில் உள்ளது. அம்பாள் பெரியநாயகி என்ற பிருஹத் நாயகி. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட கோயிலாகும்.

கிழக்கு ராஜ வீதி நடுவில் அமைந்த கிழக்கு நோக்கிய இராஜகோபுரம், குடவரை வாயில் கடந்த கொடிமர மண்டபமும், தென்புறம் நீண்ட உயர் மண்டபமும் உள்ளது. வடபுறம் நீண்ட உயர்ந்த மண்டபத்தில் அம்பாள் கருவறையும், அர்த்த மண்டப தளியும், பள்ளியறையும் உள்ளன. இதனைக் கடந்து உட்புகும்போது, பழைய இராஜகோபுர குடவரை வாயிலும், உட்பிரகாரமும் உள்ளன. வடபுறத்தில் கூத்தப் பெருமாளுக்கு கோட்டமும், தென்புறம் அனுக்கை விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், கன்னிமூலகணபதி, மகாலெட்சுமி, முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. கோயிலில் ஆனிப் பெருவிழா ஜூன் 30}இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 8}இல் தேரோட்டம் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து 2.கி.மீ. தொலைவில் கண்டதேவி ஊர் அமைந்துள்ளது.

}பொ.ஜெயச்சந்திரன்

இழந்த பதவியை தருபவர்...

முற்காலத்தில் இலஞ்சியை ஆண்டு வந்த பகீரதன், தனது நாட்டில் நிலவிய செல்வ வளத்தால் கர்வம் மிகுந்திருந்தார். ஒருசமயம் அவனது சபைக்கு நாரதர் வந்தபோது, அரசர் உபசரிக்கவில்லை. கோபமுற்ற முனிவர் அங்கிருந்து சென்ற... மேலும் பார்க்க

அறுபடை வீடு கொண்ட திருமுருகா...

முன்பொரு காலத்தில் தேவர்களுக்கு அசுரர்கள் பல தொல்லைகளை அளித்து வந்தனர். அசுரர்களில் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவன். எனவே தேவர்கள் சிவனை வேண்டினர். பிரார்த்தனையை ஏற்ற சிவனும்,... மேலும் பார்க்க

தேசம் போற்றும் தேசிகநாத சுவாமி

சூரைக்குடியில் ஆவுடையநாயகி சமேத தேசிகநாத சுவாமி புகழ்பெற்று விளங்குகிறார். இங்கு காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடைபெறுகிறது."ஒருமுறை பார்வதி தேவியி... மேலும் பார்க்க

திருவாசகம் தந்த மாணிக்கவாசகர்...

பாண்டிய நாட்டின் வைகை நதிக்கரையில் உள்ளது திருவாதவூர். சனி பகவானின் வாத நோயை சிவன் தீர்த்ததால், "திருவாதவூர்' என்று பெயர். இந்தச் சிறப்புமிகு ஊரில் பிறந்தார் மணிவாசகர், "திருவாதவூரார்' என்று அழைக்கப்ப... மேலும் பார்க்க

ஆனித் திருமஞ்சன அற்புதம்

ஆண்டை இரண்டாகப் பிரிப்பார்கள். ஒன்று தட்சிணாயனம். மற்றொன்று உத்தராயணம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல். தட்சிணாயனம் என்பது அவர்களின் இரவு. மனிதர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். உத்த... மேலும் பார்க்க

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 27 - ஜூலை 3) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)எதிர்பாராத வரவு உண்... மேலும் பார்க்க