செய்திகள் :

தேசம் போற்றும் தேசிகநாத சுவாமி

post image

சூரைக்குடியில் ஆவுடையநாயகி சமேத தேசிகநாத சுவாமி புகழ்பெற்று விளங்குகிறார். இங்கு காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடைபெறுகிறது.

"ஒருமுறை பார்வதி தேவியின் தந்தை தட்சண் யாகம் நடத்தினார். இதற்கு சிவனை அழைக்கவில்லை. யாகத்தில் சூரியன் கலந்துகொண்டார். அப்போது சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தினார். சிவனின் கோபத்துக்கு ஆளான சூரியன், பூலோகம் வந்து இத்தலத்தில் தங்கி விமோசனம் கேட்டு அவரை வழிபட்டார். என தல வரலாறு கூறுகிறது.

சூரியனால் வழிபட்ட தலம், சூரியச் செடிகள் நிறைந்த வனம்.. என்பதால் "சூரியக்குடி' என போற்றப்பட்ட இத்தலம் பிற்காலத்தில் "சூரைக்குடி' என மருவியது.

பைரவர் கையில் சூலத்துடன் காட்சி அளிப்பார். இங்குள்ள பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு. பைரவரே பிரதான மூர்த்தியாவார்.

இங்கு நடைபெறும் ஆனி உத்திர விழாவில் சண்டிகேஸ்வரருக்குப் பதிலாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷம். கோஷ்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். இவரது தலையில் கிரீடம் அணிந்துள்ளது வித்தியாசமான அம்சம்.

நான்கு சிம்மங்கள் கொண்ட பீடத்தில் நந்தி, நான்கு கரங்களுடனும், நெற்றிக்கண்ணுடனும் அம்பாள் காட்சியளிக்கின்றனர். நடராஜர் தெற்கு நோக்கி உள்ளார். நவக்கிரக மண்டபம் உள்ளது. காசி விசுவநாதர், விசாலாட்சி, வள்ளி}தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரஸ்வதி, நால்வர், அறுபத்து மூவர், வட்ட வடிவத்தில் காவல் தெய்வமான முனீஸ்வரர் ஆகிய தெய்வங்கள் உள்ளன.

ஆனந்தமூர்த்தி எனும் பீட வடிவில் உள்ள சுவாமிக்கு மல்லாரி இசை வாசித்து தயிர் சாதம் படைக்கப்படுகிறது. இந்தக் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 2}ஆம் தேதி காலை 11மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதற்கான பூஜைகள் ஜூன் 29}இல் தொடங்குகிறது. திருமயத்தில் இருந்து சுமார் 10.கி.மீ.தொலைவில் சூரைக்குடி திருத்தலம் அமைந்துள்ளது.

}பொ.ஜெயச்சந்திரன்

திருவாசகம் தந்த மாணிக்கவாசகர்...

பாண்டிய நாட்டின் வைகை நதிக்கரையில் உள்ளது திருவாதவூர். சனி பகவானின் வாத நோயை சிவன் தீர்த்ததால், "திருவாதவூர்' என்று பெயர். இந்தச் சிறப்புமிகு ஊரில் பிறந்தார் மணிவாசகர், "திருவாதவூரார்' என்று அழைக்கப்ப... மேலும் பார்க்க

ஆனித் திருமஞ்சன அற்புதம்

ஆண்டை இரண்டாகப் பிரிப்பார்கள். ஒன்று தட்சிணாயனம். மற்றொன்று உத்தராயணம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல். தட்சிணாயனம் என்பது அவர்களின் இரவு. மனிதர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். உத்த... மேலும் பார்க்க

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 27 - ஜூலை 3) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)எதிர்பாராத வரவு உண்... மேலும் பார்க்க

குறை தீர்க்கும் பொன்னியம்மன்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பனப்பாக்கம் கிராம எல்லையில், ஏரிக்கரையோரமாக மண்ணில் புதைந்திருந்தது சுவாமி சிலை. அந்த வழியாக நடந்து சென்ற சரோஜா என்ற இளம்பெண் தற்செயலாகப் பார்த்தார். உடனே அவர் அருகில் சென்றபோ... மேலும் பார்க்க

எம பயம் போக்கும் தண்டீசுவரர்..

"சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, அரிய வரங்களைப் பெற்றான் சோமுகன் என்ற அசுரன். அதனால் அகந்தை கொண்டு உலகை கைப்பற்றி, வானுலகம் சென்று பிரம்மாவின் சத்தியலோகத்தில் இருந்த நான்கு வேதங்களையும் கவர்ந்தான். ... மேலும் பார்க்க

மனக்குறை நீக்கும் மச்சபுரி...

பூவுலகைக் காக்க, தீயவற்றை அழிக்க விஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் குறிப்பிடப்படும் தசாவதாரங்களில் முதன்மையானது மச்சாவதாரம். படைப்பு அசதியில் பிரம்மா அயர்ந்தபோது, அவர் வாயிலிருந்து தாமே வெளிவந்... மேலும் பார்க்க