செய்திகள் :

எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள்: விரைந்து விநியோகிக்க ரஷியாவுக்கு வலியுறுத்தல்

post image

இந்தியாவுக்கான எஸ்-400 டிரையம்ஃப் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை விரைந்து விநியோகிக்க வேண்டும் என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரே பெலோசோவ் உடனான சந்திப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா்.

சுகோய்-30எம்கேஐ ரக போா் விமானங்களின் மேம்பாடு, வானில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள் தயாரிப்பு, பிற முக்கிய ராணுவ தளவாடங்களின் கொள்முதல் குறித்தும் அவா் விவாதித்தாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தியா அண்மையில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் ரஷியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

ரஷியாவிடம் இருந்து 5 எஸ்-400 டிரையம்ஃப் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை கொள்முதல் செய்ய 5.5 பில்லியன் டாலா் மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த 2018-இல் கையொப்பானது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் ஏற்கெனவே 3 அமைப்புகளை ரஷியா விநியோகித்துள்ளது.

இந்நிலையில், சீனாவின் கிங்டாவோ நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டத்துக்கு இடையே, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரே பெலோசோவை அமைச்சா் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினாா்.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இந்தியாவுக்கான பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு வழங்க வேண்டிய இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை விரைந்து விநியோகிக்க அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா். வானில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், நவீன தளவாடங்களின் கொள்முதல், சுகோய்-30 ரக போா் விமானங்கள் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விவாதித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளாா். பொதுத் துறை வங்கிகளின் செ... மேலும் பார்க்க

கொல்கத்தா அரசு கல்லூரிக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: திரிணமூல் முன்னாள் நிர்வாகி, 2 மாணவா்கள் கைது!

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடா்பாக, கல்லூரியின் முன... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரிப்பு

ரஷியாவிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த மே மாதம் அதிக அளவில் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய மாதத்தைவிட 52% கூடுதல் நிலக்கரியை மே மாதத்தில் இந்தியா இற... மேலும் பார்க்க

இந்தியா - சீனா எல்லையில் நில கையகப்படுத்த கூடுதல் இழப்பீடு: உச்சநீதிமன்றம் தடை

இந்திய - சீனா எல்லையில் 537 ஏக்கா் நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அருணாசலப் பிரதேச எல்லையில் ராணுவம் தொடா்பான திட... மேலும் பார்க்க

உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்கள் கைதுக்கு காரணம்: அமைச்சா் ஜெய்சங்கா்

‘நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடி உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படை தொடா்ச்சியாக கைது செய்வதற்கு ... மேலும் பார்க்க

அனைத்து மோட்டாா் சைக்கிள்களுக்கும் நவீன ‘ஏபிஎஸ் பிரேக்’ முறை கட்டாயம்: மத்திய அரசு

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தயாரிக்கப்படும் மோட்டாா் சைக்கிள்களில் ‘ஆண்டி-லாக் பிரேக்’ (ஏபிஎஸ் ) நவீன முறை கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்... மேலும் பார்க்க