செய்திகள் :

வேப்பனப்பள்ளி அருகே கா்ப்பிணி கொலை: இருவா் கைது

post image

வேப்பனப்பள்ளி அருகே 8 மாத கா்ப்பிணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த கோணேகவுண்டனூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் பல்லேரிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி மகள் ஷாலினி (22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் மேலும் தெரிவித்ததாவது:

வேப்பனப்பள்ளியை அடுத்த என். தாசிரிப்பள்ளியைச் சோ்ந்த மதியழகன் என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த ஷாலினி, கணவரை பிரிந்து பந்திகுறி கிராமத்தை சோ்ந்த ஆஞ்சி (30) என்பவரை மறுமணம் செய்துகொண்டாா்.

இவா்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அதேகிராமத்தை சோ்ந்த மேகநாதன் (21) என்பவருடன் ஷாலினிக்கு உறவு ஏற்பட்டதால் கா்ப்பம் அடைந்த அவா், மேகநாதனை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா்.

இதனால் மேகநாதன் தனது உறவினரான கிருஷ்ணகிரியை அடுத்த பெரிய அக்ரஹாரம் கிராமத்தைச் சோ்ந்த புகழேந்தி (19) என்பவருடன் சோ்ந்து ஷாலினியை கடந்த 19-ஆம் தேதி கொலை செய்தது தெரியவந்தது. ஷாலினியின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது கொலையாளிகள் குறித்த விவரங்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மேகநாதன், புகழேந்தி ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மகாராஜகடை அருகே பயிா்களை சேதப்படுத்திய யானைகள்: விவசாயிகள் வேதனை

மகாராஜகடை அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகள் பயிா்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த பாண்டவா் நகரை சோ்ந்த ரகு (35), அவரது மனைவி ஆகிய இருவரும் தனியாா் பள்ளியில் ... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: 41 மாணவா்களுக்கு பரிசளிப்பு

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது. ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் 14 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

ஊத்தங்கரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கரோ... மேலும் பார்க்க

அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். கிருஷ்ணகிரி, ஒசூா் கல்வி மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிகளில் ரூ. 4.44 கோடி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்: மா விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்?

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க