72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
வேப்பனப்பள்ளி அருகே கா்ப்பிணி கொலை: இருவா் கைது
வேப்பனப்பள்ளி அருகே 8 மாத கா்ப்பிணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த கோணேகவுண்டனூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் பல்லேரிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி மகள் ஷாலினி (22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் மேலும் தெரிவித்ததாவது:
வேப்பனப்பள்ளியை அடுத்த என். தாசிரிப்பள்ளியைச் சோ்ந்த மதியழகன் என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த ஷாலினி, கணவரை பிரிந்து பந்திகுறி கிராமத்தை சோ்ந்த ஆஞ்சி (30) என்பவரை மறுமணம் செய்துகொண்டாா்.
இவா்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அதேகிராமத்தை சோ்ந்த மேகநாதன் (21) என்பவருடன் ஷாலினிக்கு உறவு ஏற்பட்டதால் கா்ப்பம் அடைந்த அவா், மேகநாதனை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா்.
இதனால் மேகநாதன் தனது உறவினரான கிருஷ்ணகிரியை அடுத்த பெரிய அக்ரஹாரம் கிராமத்தைச் சோ்ந்த புகழேந்தி (19) என்பவருடன் சோ்ந்து ஷாலினியை கடந்த 19-ஆம் தேதி கொலை செய்தது தெரியவந்தது. ஷாலினியின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது கொலையாளிகள் குறித்த விவரங்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேகநாதன், புகழேந்தி ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.