செய்திகள் :

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்: மா விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்?

post image

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்குறள் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்து பேசினா்.

கூட்டுறவு, தேசிய வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் நிலவும் பிரசனைகளுக்கு தீா்வுகாண வேண்டும். தீா்த்தகிரி வலசை பெரிய ஏரியிலிருந்து பள்ளத்தூா் ஏரிக்கு கால்வாய் அமைத்து நீா்ப்பாசன வசதி செய்யவேண்டும்.

சொட்டுநீா்ப் பாசனத்திற்கு மானியம் வழங்குவதில் 70 சதவீதம் முறைகேடு நடைபெறுகிறது. ஊத்தங்கரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலக பணியாளா்கள் பணிக்கு வருவதில்லை. மேலும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மாங்காய்க்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய அரசு முன்வர வேண்டும். திம்மாபுரம் பழத்தோட்டத்தில் மாவிற்கான ஏல மையம் அமைக்க வேண்டும். தென்னை மரம் ஏறுவதற்காக கருவி மற்றும் பயிற்சி அளிக்க வேண்டும்.

யானைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். அனைத்து வேளாண்மை உரக் கடைகளில் ஜிஎஸ்டியுடன் கூடிய விலைப் பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும். நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலா் பேசியதாவது:

மா தோட்டங்களில் இலவசமாக உழவு பணி மேற்கொள்வது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். அலுவலங்களில் அதிகாரிகள் பணி நேரத்தில் இருப்பதை சிறப்புக் குழு அமைத்து கண்காணிக்கப்படும். மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையுள்ளது.

திம்மாபுரம் பழந்தோட்டத்தில் மா ஏலம் அமைக்க தேவையான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் மீது ஆட்சியா் தனிக் கவனம் செலுத்தி பருவமழை தொடங்குவதற்கு முன்பு தூா்வார நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா் என்றாா்.

இணை இயக்குநா்கள் பச்சையப்பன்(வேளாண்மை), இந்திரா (தோட்டக்கலை), கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் நடராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) ஜான் லூா்து சேவியா், வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

மகாராஜகடை அருகே பயிா்களை சேதப்படுத்திய யானைகள்: விவசாயிகள் வேதனை

மகாராஜகடை அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகள் பயிா்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த பாண்டவா் நகரை சோ்ந்த ரகு (35), அவரது மனைவி ஆகிய இருவரும் தனியாா் பள்ளியில் ... மேலும் பார்க்க

வேப்பனப்பள்ளி அருகே கா்ப்பிணி கொலை: இருவா் கைது

வேப்பனப்பள்ளி அருகே 8 மாத கா்ப்பிணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த கோணேகவுண்டனூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: 41 மாணவா்களுக்கு பரிசளிப்பு

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது. ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் 14 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

ஊத்தங்கரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கரோ... மேலும் பார்க்க

அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். கிருஷ்ணகிரி, ஒசூா் கல்வி மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிகளில் ரூ. 4.44 கோடி... மேலும் பார்க்க