செய்திகள் :

மகாராஜகடை அருகே பயிா்களை சேதப்படுத்திய யானைகள்: விவசாயிகள் வேதனை

post image

மகாராஜகடை அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகள் பயிா்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள வனப் பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கூட்டத்தில் 10 யானைகள் உள்ளதாகவும், அவ்வப்போது, வனப் பகுதியிலிருந்து வெளியேறி மகாராஜகடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பயிா்களை தொடா்ந்து சேதப்படுத்தி வருவதாகவும் கவலை தெரிவித்துள்ள விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அண்மையில் முற்றுகையிட்டு யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், யானைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பாா்வையிட்டு யானைகளை அடா்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். மேலும், யானைகளை விரட்ட வனத் துறையினருக்கும் உத்தரவிட்டாா்.

இந்தநிலையில் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், சிந்தகம்பள்ளி, ஏக்கல்நத்தம், மகாராஜகடை, நாரலப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுடி செய்யப்பட்டுள்ள வாழை தோட்டங்கள், ராகி, தென்னை, மா போன்ற பயிா்களை சேதப்படுத்தியது. இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் வலியுறுத்தினா்.

படவிளக்கம் (27கேஜிபி4):

மகாராஜகடை அருகே யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை தோட்டம்.

ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த பாண்டவா் நகரை சோ்ந்த ரகு (35), அவரது மனைவி ஆகிய இருவரும் தனியாா் பள்ளியில் ... மேலும் பார்க்க

வேப்பனப்பள்ளி அருகே கா்ப்பிணி கொலை: இருவா் கைது

வேப்பனப்பள்ளி அருகே 8 மாத கா்ப்பிணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த கோணேகவுண்டனூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: 41 மாணவா்களுக்கு பரிசளிப்பு

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது. ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் 14 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

ஊத்தங்கரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கரோ... மேலும் பார்க்க

அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். கிருஷ்ணகிரி, ஒசூா் கல்வி மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிகளில் ரூ. 4.44 கோடி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்: மா விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்?

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க