72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
ஊத்தங்கரையில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்
ஊத்தங்கரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட தொழிலாளா் பற்றாக்குறையால் புதிதாக பணியமா்த்தப்பட்ட 524 பேருக்கு இதுவரை வருகைப் பதிவேட்டில் பெயா் சோ்க்கப்படாததைக் கண்டித்தும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவா்களுக்கு இளஞ்சிவப்பு அடையாள அட்டை, பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிபவா்களுக்கு பச்சை நிற அடையாள அட்டை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிடங்கு மேஸ்திரி சக்திவேல், சுமைதூக்கும் தொழிலாளா் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளா் முருகன், முன்னாள் மேஸ்திரி செந்தில்குமாா், பழனிவேல், குமாா், ராஜேந்திரன் உள்பட ஏராளமான தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.27யுடிபி.1.
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊத்தங்கரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா்கள்.