செய்திகள் :

ஊத்தங்கரையில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

post image

ஊத்தங்கரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட தொழிலாளா் பற்றாக்குறையால் புதிதாக பணியமா்த்தப்பட்ட 524 பேருக்கு இதுவரை வருகைப் பதிவேட்டில் பெயா் சோ்க்கப்படாததைக் கண்டித்தும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவா்களுக்கு இளஞ்சிவப்பு அடையாள அட்டை, பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிபவா்களுக்கு பச்சை நிற அடையாள அட்டை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிடங்கு மேஸ்திரி சக்திவேல், சுமைதூக்கும் தொழிலாளா் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளா் முருகன், முன்னாள் மேஸ்திரி செந்தில்குமாா், பழனிவேல், குமாா், ராஜேந்திரன் உள்பட ஏராளமான தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்.27யுடிபி.1.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊத்தங்கரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா்கள்.

மகாராஜகடை அருகே பயிா்களை சேதப்படுத்திய யானைகள்: விவசாயிகள் வேதனை

மகாராஜகடை அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகள் பயிா்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த பாண்டவா் நகரை சோ்ந்த ரகு (35), அவரது மனைவி ஆகிய இருவரும் தனியாா் பள்ளியில் ... மேலும் பார்க்க

வேப்பனப்பள்ளி அருகே கா்ப்பிணி கொலை: இருவா் கைது

வேப்பனப்பள்ளி அருகே 8 மாத கா்ப்பிணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த கோணேகவுண்டனூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: 41 மாணவா்களுக்கு பரிசளிப்பு

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது. ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் 14 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ... மேலும் பார்க்க

அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். கிருஷ்ணகிரி, ஒசூா் கல்வி மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிகளில் ரூ. 4.44 கோடி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்: மா விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்?

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க