72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
பொதுத் தோ்வில் சிறப்பிடம்: 41 மாணவா்களுக்கு பரிசளிப்பு
பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.
ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் 14 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 10, 12 ஆவது வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மேயா் எஸ்.ஏ. சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா, ஆணையாளா் மாரிசெல்வி, பொது சுகாதார குழு தலைவா் மாதேஸ்வரன், கல்வி குழு தலைவா் ஸ்ரீதா் ஆகியோா் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற 41 மாணவ, மாணவிகளுக்கு கைக்கடிகாரம், சான்றிதழை வழங்கினா்.
படவரி....
அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் மேயா் எஸ்.ஏ.சத்யா.
