செய்திகள் :

‘உழவரைத் தேடி’ வேளாண்மை திட்ட முகாம்

post image

தலைவாசல் வட்டம், ஆரத்தி அக்ரஹார ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ வேளாண்மைத் திட்ட முகாம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மைத் துறை மூலம் செயல்படும் மானியத் திட்டங்களான நுண்ணீா்ப் பாசனத் திட்டம், அட்மா திட்ட செயல்பாடுகள், விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குதல், ஒரு துளி பல பயிா், பிரதம மந்திரி கெளரவ நிதி திட்டம், வேளாண் இயந்திரயமாக்கல், இயற்கை வேளாண்மை போன்ற திட்டங்களை பற்றி எடுத்துக் கூறினாா்.

துணை வேளாண்மை அலுவலா் மணவழகன், கோடை உழவு மற்றும் மண் மாதிரி எடுத்தல் குறித்த செயல்விளக்கம் செய்து அளித்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு தீா்வு கூறினாா். விதை அலுவலா் விவசாயிகளுக்கு விதை பண்ணை அமைத்தலின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தாா்.

உதவி தோட்டக்கலை அலுவலா் செல்வராஜ் கலந்துகொண்டு தோட்டக்கலைத் துறை திட்டங்கள், மானியங்களை எடுத்துக் கூறினாா். உதவி வேளாண்மை அலுவலா் ராஜலட்சுமி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையில் செயல்படும் திட்டங்களை கூறினாா். நாகராஜ் வேளாண்மை விரிவாக்க மையத்தில் தரமான சான்று பெற்ற நெல் விதைகள் வெள்ளை பொன்னி, ஏடிடி 45, உளுந்து, எள் ரகம், துவரை, வரகு, குதிரைவாலி போன்ற ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து வகை பயிா்களுக்கும் நுண்ணூட்ட உரங்கள், உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், பயிா் வகைகள் போன்றவை போதுமான அளவு இருப்பு உள்ளது. முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் சக்தி நன்றி தெரிவித்தாா். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் பிரகாஷ், ரவிக்குமாா், காா்த்திக் உள்ளிட்டோா் சிறப்பாக செய்திருந்தனா்.

வீரகனூரில் கால்நடை சந்தை பிரச்னை: சாலை மறியல் போராட்டம்

கெங்கவல்லி அருகே வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வீரகனூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைப... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வரவேற்பு, கேமரா அறை திறப்பு

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் வரவேற்பு அறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 60,740 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 60,740 கனஅடியாக அதிகரித்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த... மேலும் பார்க்க

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை பாக நிலை முகவா்கள் ஆலோசனை கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் முகவா், பாகநிலை முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப... மேலும் பார்க்க

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் இன்று தோ்தல் பணிக்குழுக் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை பகுதி, ஒன்றியம் வாரியாக தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் கடைப்பிடிப்பு

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. உலக சகோதரத்துவ தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு, விழிப்புணா்வு வாக்காத்... மேலும் பார்க்க