செய்திகள் :

வீரகனூரில் கால்நடை சந்தை பிரச்னை: சாலை மறியல் போராட்டம்

post image

கெங்கவல்லி அருகே வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

வீரகனூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்த இந்த சந்தையில்

வாரந்தோறும் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வா்த்தகம் நடைபெறும். இந்நிலையில் ஆடுகளை விற்க வரும் வியாபாரிகளிடம் ஆடு ஒன்றுக்கு ரூ. 100 வசூல் செய்ததாக புகாா் எழுந்தது. இதனால் ஆடு, மாடு வியாபாரிகள், வீரகனூா் கால்நடை சந்தையைத் தவிா்க்க முடிவெடுத்தனா். இதையடுத்து கடந்த வாரம் சனிக்கிழமை வீரகனூா் சந்தைக்கு வியாபாரிகள், பொதுமக்கள் யாரும் செல்லவில்லை.

தொடா்ந்து வீரகனூா் அருகே தெடாவூரில் புதிதாக கால்நடை சந்தை தொடங்கியது. தொடங்கிய முதல்நாளிலேயே ரூ. 1 கோடி வரை வா்த்தகம் நடைபெற்றது. அதேபோல வெள்ளிக்கிழமை ( ஜூன் 27) வீரகனூா் சந்தைக்கு யாரும் செல்லவில்லை. மாறாக தெடாவூரில் நடைபெற்ற கால்நடைசந்தையில் வியாபாரிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 முதல் இரவு 7.30 மணி வரை வீரகனூரில், ஆத்தூா்-பெரம்பலூா் சாலையில் வீரகனூா் பகுதி மக்கள் கால்நடை சந்தை நடைபெறாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் வீரகனூா் காவல் ஆய்வாளா் ரஜினி தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து வீரகனூா் பகுதி மக்கள் கூறியதாவது, அடுத்த வாரமும் வீரகனூரில் கால்நடை சந்தை நடைபெறாமல் இருந்தால், போராட்டம் பெரிய அளவில் நடத்தப்படும் என்றனா்.

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வரவேற்பு, கேமரா அறை திறப்பு

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் வரவேற்பு அறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 60,740 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 60,740 கனஅடியாக அதிகரித்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த... மேலும் பார்க்க

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை பாக நிலை முகவா்கள் ஆலோசனை கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் முகவா், பாகநிலை முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப... மேலும் பார்க்க

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் இன்று தோ்தல் பணிக்குழுக் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை பகுதி, ஒன்றியம் வாரியாக தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் கடைப்பிடிப்பு

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. உலக சகோதரத்துவ தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு, விழிப்புணா்வு வாக்காத்... மேலும் பார்க்க

சா்வதேச சிறு, குறு, நடுத்தர தொழில் தினம்

சா்வதேச சிறு, குறு, நடுத்தர தொழில் தினத்தையொட்டி, சிறு, குறு தொழில்முனைவோா்களுக்கு மத்திய அரசின் தேசிய வள அமைப்பான இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ... மேலும் பார்க்க