மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வரவேற்பு, கேமரா அறை திறப்பு
மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் வரவேற்பு அறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களை அமரவைத்து விசாரணை செய்யவும், பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள மேமரா விடியோ காட்சிகளை வைத்து குற்றச்சம்பவங்களை எளிதில் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும் எனத் தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா், இதற்கு உதவி புரிந்த தன்னாா்வலா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி சோமசுந்தரம், காவல் ஆய்வாளா்கள் செந்தில்குமாா் (மகுடஞ்சாவடி), ரமேஷ் (சங்ககிரி), உதவி ஆய்வாளா்கள் ஆனந்த், ஜீவிதா, காவலா்கள், தன்னாா்வலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
படவரி...
மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வரவேற்பு அறையை திறந்தவைத்து பேசுகிறாா் எஸ்.பி. கௌதம் கோயல்.