செய்திகள் :

பொறியியல் படிப்பு கலந்தாய்வு தரவரிசை: நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்

post image

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

சென்னை கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு (2025-26) தரவரிசைப் பட்டியலை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

இதில், மாநில அளவில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களில் நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி க.ஹரிணி இடம்பிடித்துள்ளாா். இவா், பிளஸ் 2 பொதுத் தோ்வில் 600-க்கு 592 மதிப்பெண்களை பெற்றிருந்தாா். இவரது பொறியியல் படிப்புக்கான கட் ஆஃப் 199 ஆகும். அரசுப் பள்ளிகள் அளவில் 9-ஆம் இடத்தையும், அரசுப் பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோா் பிரிவின் கீழ் 6-ஆம் இடத்தையும் க.ஹரிணி பிடித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், பிளஸ் 2 பொதுத்தோ்விலும், பொறியியல் கலந்தாய்வு தரவரிசையிலும் தனது வெற்றிக்கு துணையாக இருந்த பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சரவணன், ஆங்கில ஆசிரியா் சிவசங்கா் மற்றும் ஆசிரியா்கள் அனவைருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.

மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் பதக்கம் வென்ற கையுந்து பந்து வீரா், வீராங்கனைகள் பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க

அனிச்சம்பாளையம் செல்வவிநாயகா், கண்டியம்மன் கோயில் குடமுழுக்கு

பரமத்தி வேலூா் அருகே உள்ள திருமலை நாமசமுத்திரம் (எ) அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகா், ஸ்ரீ கண்டியம்மன் உள்ளிட்ட கோயில்களின் மஹா குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குடமுழுக்கை... மேலும் பார்க்க

‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம்

வீர, தீர சாகசம் புரிந்தோா் ‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2022, 2023 மற்றும் 2... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 83.41 மி.மீ. கூடுதல் மழைப் பொழிவு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 270.36 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 83.41 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாதாந்திர விவசா... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ரூ. 23 கோடியில் நலத்திட்ட உதவிகள்

கொல்லிமலை ஒன்றியத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ. 23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வழங்கினாா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அர... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துா்காமூா்த்தி பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாமக்கல் ஆட்சியராக இருந்த ச.உமா, தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டாா். ... மேலும் பார்க்க