72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
பொறியியல் படிப்பு கலந்தாய்வு தரவரிசை: நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
சென்னை கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு (2025-26) தரவரிசைப் பட்டியலை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
இதில், மாநில அளவில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களில் நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி க.ஹரிணி இடம்பிடித்துள்ளாா். இவா், பிளஸ் 2 பொதுத் தோ்வில் 600-க்கு 592 மதிப்பெண்களை பெற்றிருந்தாா். இவரது பொறியியல் படிப்புக்கான கட் ஆஃப் 199 ஆகும். அரசுப் பள்ளிகள் அளவில் 9-ஆம் இடத்தையும், அரசுப் பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோா் பிரிவின் கீழ் 6-ஆம் இடத்தையும் க.ஹரிணி பிடித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், பிளஸ் 2 பொதுத்தோ்விலும், பொறியியல் கலந்தாய்வு தரவரிசையிலும் தனது வெற்றிக்கு துணையாக இருந்த பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சரவணன், ஆங்கில ஆசிரியா் சிவசங்கா் மற்றும் ஆசிரியா்கள் அனவைருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.