ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
தேசிய அளவில் பதக்கம் வென்ற கையுந்து பந்து வீரா், வீராங்கனைகள் பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ‘விளையாடு இந்தியா’ திட்ட நிதியுதவியில் தொடக்கநிலை கையுந்து பந்து பயிற்சிக்கான மாவட்ட மையம், நாமக்கல் விளையாட்டு அரங்கத்தில் அமைய உள்ளது. இந்த மையத்தில் 30 முதல் 100 எண்ணிக்கையில் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் பயிற்சியாளராக சோ்ந்து பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்கு உள்பட்ட கையுந்து பந்து வீரா், வீராங்கனை ஒருவா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். விண்ணப்பதாரா்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமலும், தற்போது நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். சா்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, மூத்தோா் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டவராகவோ இருக்க வேண்டும்.
தோ்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர ஊதியமாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. அதனடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ, நிரந்தரப்பணியோ கோர இயலாது. விண்ணப்பங்களை ஜூலை 1 மாலை 5 மணிக்குள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாக சமா்ப்பிக்க வேண்டும்.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத் திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஜூலை 3 காலை 10 மணியளவில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தோ்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.