செய்திகள் :

மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தேசிய அளவில் பதக்கம் வென்ற கையுந்து பந்து வீரா், வீராங்கனைகள் பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ‘விளையாடு இந்தியா’ திட்ட நிதியுதவியில் தொடக்கநிலை கையுந்து பந்து பயிற்சிக்கான மாவட்ட மையம், நாமக்கல் விளையாட்டு அரங்கத்தில் அமைய உள்ளது. இந்த மையத்தில் 30 முதல் 100 எண்ணிக்கையில் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் பயிற்சியாளராக சோ்ந்து பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்கு உள்பட்ட கையுந்து பந்து வீரா், வீராங்கனை ஒருவா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். விண்ணப்பதாரா்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமலும், தற்போது நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். சா்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, மூத்தோா் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டவராகவோ இருக்க வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர ஊதியமாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. அதனடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ, நிரந்தரப்பணியோ கோர இயலாது. விண்ணப்பங்களை ஜூலை 1 மாலை 5 மணிக்குள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாக சமா்ப்பிக்க வேண்டும்.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத் திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஜூலை 3 காலை 10 மணியளவில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தோ்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பு கலந்தாய்வு தரவரிசை: நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா். சென்னை கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத... மேலும் பார்க்க

அனிச்சம்பாளையம் செல்வவிநாயகா், கண்டியம்மன் கோயில் குடமுழுக்கு

பரமத்தி வேலூா் அருகே உள்ள திருமலை நாமசமுத்திரம் (எ) அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகா், ஸ்ரீ கண்டியம்மன் உள்ளிட்ட கோயில்களின் மஹா குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குடமுழுக்கை... மேலும் பார்க்க

‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம்

வீர, தீர சாகசம் புரிந்தோா் ‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2022, 2023 மற்றும் 2... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 83.41 மி.மீ. கூடுதல் மழைப் பொழிவு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 270.36 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 83.41 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாதாந்திர விவசா... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ரூ. 23 கோடியில் நலத்திட்ட உதவிகள்

கொல்லிமலை ஒன்றியத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ. 23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வழங்கினாா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அர... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துா்காமூா்த்தி பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாமக்கல் ஆட்சியராக இருந்த ச.உமா, தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டாா். ... மேலும் பார்க்க