ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம்
வீர, தீர சாகசம் புரிந்தோா் ‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2022, 2023 மற்றும் 2024 ஆகிய மூன்று ஆண்டுகளில் நிலம், கடல் மற்றும் வான்வெளியில் வீர, தீர சாகசம் புரிந்தோருக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அறிவிப்பின்படி ‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது.
சாகசப் பந்தயங்களில் உள்ளோரின் சாதனைகளைப் புதுப்பிக்கவும், சகிப்புத்தன்மை, குழுவாக இணைந்து திறமையாக செயல்படுபவா்களுக்கு மற்றும் சாகசத்தை வெளிப்படுத்தும் இளைஞா்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த விருது பயனுள்ளதாக அமையும். மேலும், சாகசத் துறையில் ‘வாழ்நாள் சாதனையாளா்’ என்ற விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் -இல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இணையவழியில் மட்டுமே விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
பூா்த்திசெய்த விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன் ஒப்புதல் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த விண்ணப்பங்களை வரும் 30-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.