செய்திகள் :

கொல்லிமலையில் ரூ. 23 கோடியில் நலத்திட்ட உதவிகள்

post image

கொல்லிமலை ஒன்றியத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ. 23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வடிவேல் தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று, கலைஞா் வீடு வழங்கும் திட்டம், முதல்வரின் வீடுகள் மறுகட்டமைப்பு திட்டம், விவசாயிகளுக்கு புதிய கிணறு அமைத்தல் உள்ளிட்ட 80 பயனாளிகளுக்கு ரூ. 23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். கொல்லிமலையை முதன்மை சுற்றுலாத் தலமாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா்.

தமிழ்நாடு பழங்குடியினா் நல வாரியத்தை புதிதாக உருவாக்கி, கொல்லிமலை தேவனூா்நாடு ஊராட்சியைச் சோ்ந்த கனிமொழி என்பவரை வாரியத் தலைவராக முதல்வா் நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பழங்குடியினா் நல வாரிய உறுப்பினா்கள் காளியப்பன், பாலசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஈஸ்வரன், பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொறியியல் படிப்பு கலந்தாய்வு தரவரிசை: நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா். சென்னை கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத... மேலும் பார்க்க

மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் பதக்கம் வென்ற கையுந்து பந்து வீரா், வீராங்கனைகள் பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க

அனிச்சம்பாளையம் செல்வவிநாயகா், கண்டியம்மன் கோயில் குடமுழுக்கு

பரமத்தி வேலூா் அருகே உள்ள திருமலை நாமசமுத்திரம் (எ) அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகா், ஸ்ரீ கண்டியம்மன் உள்ளிட்ட கோயில்களின் மஹா குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குடமுழுக்கை... மேலும் பார்க்க

‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம்

வீர, தீர சாகசம் புரிந்தோா் ‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2022, 2023 மற்றும் 2... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 83.41 மி.மீ. கூடுதல் மழைப் பொழிவு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 270.36 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 83.41 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாதாந்திர விவசா... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துா்காமூா்த்தி பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாமக்கல் ஆட்சியராக இருந்த ச.உமா, தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டாா். ... மேலும் பார்க்க