ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
அனிச்சம்பாளையம் செல்வவிநாயகா், கண்டியம்மன் கோயில் குடமுழுக்கு
பரமத்தி வேலூா் அருகே உள்ள திருமலை நாமசமுத்திரம் (எ) அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகா், ஸ்ரீ கண்டியம்மன் உள்ளிட்ட கோயில்களின் மஹா குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கை முன்னிட்டு புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் மகா கணபதி வழிபாடு, மகாலட்சுமி யாகம், நவக்கிரக வழிபாடு, மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, யந்தர ஸ்தாபனம், கோபுரம் கண் திறத்தல், மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக்கிழமை பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீா் எடுத்து வருதலும், மாலை 5 மணிக்கு மேல் தீப வழிபாடு, புண்ணிய யாகம், வாஸ்து சாந்தி, பூமிபூஜை, காப்புக் கட்டுதல், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை அதிகாலை தமிழ்முறை பாராயணம், இரண்டாம்கால யாக பூஜைகள், நாடி சந்தானம், ஸ்பா்ஸாகுதி, இரண்டாம்கால யாக வேள்வி, இரண்டாம்கால மங்கள பூா்ணாஹுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேல் 7.10 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகா், ஸ்ரீ கண்டியம்மன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ சப்த கன்னிமாா், ஸ்ரீ வெள்ளையம்மாள், ஸ்ரீ பொம்மியம்மாள் சமேத ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய ஆலய கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.
பின்னா், அனைத்து தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
