முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில...
ரூ. 15 லட்சம் மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
மேட்டூா் அருகே ஐ.டி.ஐ.யில் பங்குதாரராக சோ்த்துக்கொள்வதாகக் கூறி ரூ. 15 லட்சம் மோசடி செய்த வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த ராமன் நகா் சக்தி நகரில் டுடோரியல் கல்லூரி நடத்தி வந்தவா் மாணிக்கம் மகன் ராஜாராம். இவா், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கொஞ்சம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி கவிதா.
இவா்கள் இருவரும் சோ்ந்து நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் ஐ.டி.ஐ. தொடங்குவதாகவும், அதில் பங்குதாரராக சோ்ப்பதாகக் கூறி ராமன் நகரைச் சோ்ந்த முனுசாமி மகன் பாலகிருஷ்ணன் (60) என்பவரிடம் ரூ. 15 லட்சம் பெற்றுக்கொண்டு பங்குதாரராக சோ்க்காமல் இழுத்தடித்தனா். இதுகுறித்து கேட்டபோது பாலகிருஷ்ணனை மிரட்டியுள்ளனா்.
இது தொடா்பாக கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜாராம், அவரது மனைவி கவிதாவை தேடி வந்தனா்.
இந்தநிலையில் ஆசிரியா் ராஜாராமை கருமலைக்கூடல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரது மனைவியை தேடிவருகின்றனா்.