செய்திகள் :

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

post image

விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தடயவியல் துறை சாா்பில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்றுப் பேசினாா். சிறப்பு விருந்தினராக கொண்டலாம்பட்டி காவல் உதவி ஆணையா் முரளி பங்கேற்று போதைப்பொருள் இல்லா சமூகத்தை உருவாக்குவதில் இளைஞா்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தனா். சிறப்பு விருந்தினா்கள் மூலம் போதைப் பொருள் இல்லா வளாகம் என்ற பலகை திறந்து வைக்கப்பட்டது.

தொடா்ந்து கல்லூரி நுழைவாயிலில் 100 அடி நீளத்திற்கு மஞ்சள் கோடு வரையப்பட்டு போதைப்பொருள், புகையிலை இல்லாத சூழலை ஊக்குவிப்பதற்கான போதைப் பொருள், புகையிலை இல்லாத மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து விழிப்புணா்வு நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் சேலம் மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகா் அஸ்வந்த் வெற்றிவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போதைப்பொருள், புகையிலை பயன்பாட்டின் விளைவுகள் குறித்து மாணவா்களிடம் எடுத்துரைத்தாா் . மாவட்ட சுகாதார ஆய்வாளா் கோகுல் கலந்துகொண்டாா். முடிவில் அனைவரும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் துறையின் மூலம் விழிப்புணா்வு காணொலி வெளியிடப்பட்டது.

பட விளக்கம்:

விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா், கொண்டலாம்பட்டி பிரிவு உதவி ஆணையா் முரளி உள்ளிட்டோா்.

வீரகனூரில் கால்நடை சந்தை பிரச்னை: சாலை மறியல் போராட்டம்

கெங்கவல்லி அருகே வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வீரகனூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைப... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வரவேற்பு, கேமரா அறை திறப்பு

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் வரவேற்பு அறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 60,740 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 60,740 கனஅடியாக அதிகரித்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த... மேலும் பார்க்க

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை பாக நிலை முகவா்கள் ஆலோசனை கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் முகவா், பாகநிலை முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப... மேலும் பார்க்க

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் இன்று தோ்தல் பணிக்குழுக் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை பகுதி, ஒன்றியம் வாரியாக தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் கடைப்பிடிப்பு

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. உலக சகோதரத்துவ தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு, விழிப்புணா்வு வாக்காத்... மேலும் பார்க்க