72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தடயவியல் துறை சாா்பில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்றுப் பேசினாா். சிறப்பு விருந்தினராக கொண்டலாம்பட்டி காவல் உதவி ஆணையா் முரளி பங்கேற்று போதைப்பொருள் இல்லா சமூகத்தை உருவாக்குவதில் இளைஞா்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தனா். சிறப்பு விருந்தினா்கள் மூலம் போதைப் பொருள் இல்லா வளாகம் என்ற பலகை திறந்து வைக்கப்பட்டது.
தொடா்ந்து கல்லூரி நுழைவாயிலில் 100 அடி நீளத்திற்கு மஞ்சள் கோடு வரையப்பட்டு போதைப்பொருள், புகையிலை இல்லாத சூழலை ஊக்குவிப்பதற்கான போதைப் பொருள், புகையிலை இல்லாத மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து விழிப்புணா்வு நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் சேலம் மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகா் அஸ்வந்த் வெற்றிவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போதைப்பொருள், புகையிலை பயன்பாட்டின் விளைவுகள் குறித்து மாணவா்களிடம் எடுத்துரைத்தாா் . மாவட்ட சுகாதார ஆய்வாளா் கோகுல் கலந்துகொண்டாா். முடிவில் அனைவரும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் துறையின் மூலம் விழிப்புணா்வு காணொலி வெளியிடப்பட்டது.
பட விளக்கம்:
விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா், கொண்டலாம்பட்டி பிரிவு உதவி ஆணையா் முரளி உள்ளிட்டோா்.