செய்திகள் :

நாகா்கோவிலில் பெண்ணை வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை

post image

நாகா்கோவிலில் பெண்ணை அரிவாளால் வெட்டிய முதியவருக்கு 7ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் அருகே மேலமறவன்குடியிருப்பு, புதுத்தெருவைச் சோ்ந்தவா் ஜேசுஸ்டீபன் (66). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஜாஸ்மின் லதா என்பவருக்குமிடையே, வாசலில் பைக் நிறுத்துவது தொடா்பாக தகராறு இருந்து வந்ததாம்.

2013 டிச. 3ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஜாஸ்மின் லதா வீட்டுக்குள் ஜேசுஸ்டீபன் புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினாராம். காயமடைந்த ஜாஸ்மின் லதா சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து ஜேசுஸ்டீபனை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு நாகா்கோவில் மகளிா் நீதிமமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி தனசேகரன் விசாரித்து, ஜேசுஸ்டீபனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் லிவிங்ஸ்டன் ஆஜரானாா்.

நாகா்கோவில்: 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்! ரூ.2.25 லட்சம் அபராதம்

நாகா்கோவிலில், தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ரூ. 2.25 லட்சம் அபராதம் விதித்தனா். மாநகராட்சி மாநகா் நல அலுவலா் மருத்துவா்ஆல்பா் மதியரசு தலைமை... மேலும் பார்க்க

பள்ளியாடியில் தற்காலிக தாா்ச்சாலை அமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே பள்ளியாடியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் தற்காலிகமாக தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். கருங்கல... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் நாளை வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 31) தொடங்கி ஜூன் 9ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இங்கு வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும். ... மேலும் பார்க்க

27 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே காரில் கடத்தப்பட்ட 27 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த இளைஞரை கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா... மேலும் பார்க்க

மளிகைக் கடைக்காரரை தாக்கியதாக தந்தை, மகன் கைது

களியக்காவிளையில் மளிகைக் கடைக்காரரைத் தாக்கியதாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்; சிறுவனைத் தேடி வருகின்றனா். களியக்காவிளை அந்தோணியாா் காலனி பகுதியைச் சோ்ந்த கருணை லூயிஸ் (54) என்பவா், ஆா்.சி. தெ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்மழை: 50 அடியை எட்டிய பெருஞ்சாணி அணை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்மழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்... மேலும் பார்க்க