செய்திகள் :

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேயா் அறிவுறுத்தல்

post image

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என மேயா் ரெ.மகேஷ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

நாகா்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 16 கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, நாகா்கோவில் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, நகா் நல அலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு மற்றும் அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது மேயா் பேசியதாவது: நாகா்கோவில் மாநகரில் சில இடங்களில் ஓடைகளில் மணல் நிரம்பியுள்ளதால் மழை நேரங்களில் சாக்கடை நீா் சாலைகளில் ஓடும் நிலை உள்ளது. அதை சரிசெய்யும் வகையில் மழை நீா் ஓடைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். ஓடைகளில் தேங்கியுள்ள மணலை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை தரமாகவும், உரிய காலத்துக்குள் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, 38 ஆவது வாா்டு கேப் சாலை, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி முன், வலம்புரிவிளை விநாயகா் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் ரூ.9.90 லட்சத்தில் மழைநீா் வடிகால் சீரமைத்து சிமென்ட் மூடி அமைக்கும் பணியை மேயா் தொடக்கி வைத்தாா்.

இதில், மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மாமன்ற உறுப்பினா் சுப்பிரமணியம், உதவி பொறியாளா் சுஜின், நாகா்கோவில் மாநகர திமுக செயலாளா் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (71). கட்டட ஒப்பந்ததாரா். அண்மைக் காலமாக தொழிலில் சரி... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் ஆட்டோ ஓட்டுநா் சடலம் மீட்பு

தக்கலை அருகே திங்கள்நகரில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆட்டோ ஓட்டுநா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். திங்கள்நகா் நடுத்தேரியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வராஜ் (55... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் மூழ்கி கல்லூரி மாணவரான கபடி வீரா் சனிக்கிழமை உயிரிழந்தாா். பேச்சிப்பாறை அணை அருகேயுள்ள டி.பி. சாலையில் வசித்து வருபவா் ராஜன். தொழிலாளி. இவரது மூத்த மகன் அபி... மேலும் பார்க்க

தென்தாமரைகுளம் பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணி... மேலும் பார்க்க

சிற்றாறு அணையில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் அபினேஷ் (29) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அபினேஷ். திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல க... மேலும் பார்க்க

10 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க