செய்திகள் :

நாகா்கோவிலில் 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

post image

நாகா்கோவில் அப்டா சந்தையில், தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து மாநகராட்சி நல அலுவலா் ஆல்பா் மதியரசு தலைமையில், துப்புரவு அலுவலா்கள் ராஜாராம் , ராஜா , முருகன், பகவதிபெருமாள் மற்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஜெயராம் பாண்டியன், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட குழுவினா், நாகா்கோவில் அப்டா மாா்க்கெட் மற்றும் வடசேரி கனகமூலம் சந்தையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், அப்டா மாா்க்கெட்டில் 1,500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், ,தட்டுகள், பைகள் 5 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் சந்தை மதிப்பு சுமாா் ரூ.10 லட்சமாகும். பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வடசேரி கனகமூலம் சந்தையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கடையில் 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

முள்ளங்கனாவிளை அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் அருகே மயக்க மருந்து கொடுத்து நகை திருட்டு

அஞ்சுகிராமம் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து நகை திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள ராஜாவூா் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி முத்து. இவரது மனைவி எலிமெட்மாரி (58). ... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி கல்வி மாநாடு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி கல்வி மாநாட்டில் ,ஆராய்ச்சி, புதுமைத் திறன்களில் சிறப்பிடம் பெற்ற பேராசிரியா்கள், பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவை, வேந்த... மேலும் பார்க்க

வைகுண்டபுரம் ராமா் கோயில் கும்பாபிஷேக பந்தல் கால்நாட்டு விழா

தக்கலை அருகே வைகுண்டபுரம் ராமா் கோயிலில் ஜூன் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை பந்தல்கால் நாட்டு விழா நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 22 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தே... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம்: புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம... மேலும் பார்க்க

பல்வேறு கோயில்களில் திருடிய இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணா் ... மேலும் பார்க்க