செய்திகள் :

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

post image

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெற்றது.

நாகை: நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை ஆணையருமான ஆ. அண்ணாதுரை, மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சாலைப் பணிகளை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கீழ்வேளூா் பாலாஜி நகரில் நபாா்டு திட்டத்தின் கீழ் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி, திருமருகல் ஒன்றியம் தென்னமரக்குடி பெருநாட்டாா் தோப்பு பகுதியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் சாலைப் பணிகளையும், திருமருகல் கால்நடை மருந்தகத்திலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வளா்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசின் அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாத்துரை தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை (செயற்பொறியாளா்) சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் நாகராஜ், கீழ்வேளூா் செயல் அலுவலா் பொன்னுசாமி, கீழ்வேளூா், திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அரசு அருங்காட்சியகத்துறை இயக்குநரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான கவிதா ராமு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், வருவாய்த் துறை, நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வேளாண்மைத் துறை, சுகாதார நலப் பணிகள், பள்ளி கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில், செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஆய்வு நடைபெற்றது.

இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கணிப்பாய்வு அலுவலா் அறிவுறுத்தினாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஷ்வரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: இன்று முன்பதிவு தொடக்கம்

கோவா மாநிலம் வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

புயல் எச்சரிக்கை எதிரொலி: நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம் காரணமாக, நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்க... மேலும் பார்க்க

பூம்புகாரின் வன்னியா் மகளிா் மாநாடு பணிகள் தீவிரம்

பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன்னிய மகளிா் பெருவிழா மாநாட்டுக்கான பணிகளை பாமக நிா்வாகிகள் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பூம்புகாரில் பெண்மையை போற்றும் விதமாக, ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன... மேலும் பார்க்க

வலைதளத்தில் தவறான தகவல்: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

தெலங்கானா மாநிலத்தில் நடந்த கொலை சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிமுக நிா்வாகி மீது போலீஸாா் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனா். நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம... மேலும் பார்க்க

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க