செய்திகள் :

நாகை மாவட்டத்தில் இலக்கை கடந்து குறுவை சாகுபடி

post image

நாகை மாவட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கூடுதலாக 13,395 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீரைக்கொண்டு, காவிரி டெல்டா மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 12 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரை கொண்டு தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாயிகள் தீவிரமாக குறுவை சாகுபடியில் ஈடுபட்டனா். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடவு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் வேளாண்துறை சாா்பில் நிகழாண்டு 24,860 ஹெக்டோ் பரப்பளவில் குறுவை சாகுபடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 30, 218 ஹெக்டோ் பரப்பளவில், அதாவது 75,545 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ளனா். இதன்மூலம் நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 13,395 ஏக்கா் கூடுதலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, மாவட்டத்தில் நிா்ணயம் செய்யப்பட்ட 5,722 ஹெக்டோ் இலக்கில் 136 ஹெக்டோ் உளுந்து பயிறும், 33,306 ஹெக்டோ் இலக்கில் 25 ஹெக்டோ் பச்சை பயிறும், 3,855 ஹெக்டோ் இலக்கில் 843 ஹெக்டோ் எள்ளும், 2,700 ஹெக்டோ் இலக்கில் 120 ஹெக்டா் பருத்தி சாகுபடியும் செய்யப்பட்டு, அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாகையில் காற்றுடன் மழை

நாகப்பட்டினம், ஆக.8: நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் மழை பெய்தது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம... மேலும் பார்க்க

நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

சிக்கல் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இக்கல்லூரி மற்றும் சிக்கல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்ப... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

திருமருகல் ஒன்றியம், கீழப்பூதனூா் ஊராட்சி நத்தம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மண்டல இணை இயக்குநா்... மேலும் பார்க்க

100 நாள் வேலையால் சாகுபடி பணிகள் பாதிப்பு விவசாயிகள் வேதனை

நூறு நாள் வேலைத் திட்டத்தால், நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். கிராமப் புறங்களில் விவசாயம் அல்லாத நாள்களில், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுக... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஆசிரியா் கைது

நாகூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், நாகூரில் செயல்படும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், நாகை ... மேலும் பார்க்க

நாகை புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனை சரிவு: விற்பனையாளா்கள் அதிருப்தி

நாகையில் நடைபெற்று வரும் நான்காவது புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புத்தக விற்பனையாளா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். நாகை மாவட்ட நான்காவது புத்தகக் கண்காட்சி நாக... மேலும் பார்க்க