செய்திகள் :

நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ்

post image

‘அமெரிக்க பொருள்கள் மீது வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியது தொடா்பாக நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்கவுள்ள நிலையில், இந்தக் கருத்தை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

வரிகளைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபா் டிரம்ப் கூறும் காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இருதரப்பு வா்த்தக உறவு தொடா்பான பேச்சுவாா்த்தையில் பங்கேற்க மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளாா். இந்நிலையில், வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டிருப்பதாக அதிபா் டிரம்ப் தெரிவித்திருக்கிறாா்.

மோடி அரசு அமெரிக்காவிடம் எதை ஒப்புக்கொண்டுள்ளது? இந்திய விவசாயிகள் மற்றும் இந்திய உறுபத்தியாளா்களின் நலன்களை மத்திய அரசு சமரசம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதா?

நாடாளுமன்றம் வரும் 10-ஆம் தேதி மீண்டும் கூடுகிறபோது, இதுகுறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் ஊடக மற்றும் செய்தி வெளியீட்டுத் துறைத் தலைவா் பவன் கேரா கூறுகையில், ‘வரிக் குறைப்புக்கான அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பணிந்து இந்திய விவசாயிகள் மற்றும் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களின் நலன்களை மத்திய அரசு சமரசம் செய்தது ஏன்?.

அமெரிக்காவில் பிரதமா் மோடியை வைத்துக்கொண்டே, பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அதிபா் டிரம்ப் கூறும்போது, பிரதமா் ஒரு வாா்த்தைகூட பதில் பேசவில்லை. பிரதமரை வைத்துக்கொண்டே இந்தியாவை டிரம்ப் அவமதிப்பு செய்தாா். இந்தச் சூழலில், அமெரிக்க பொருள்கள் மீதான வரி விதிப்பைக் குறைத்தால், இந்திய பொருளாதாரமும், ஏற்கெனவே தோல்வியடைந்த மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டமும் மேலும் பாதிப்பைச் சந்திக்கும்’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் சுப்ரியா ஸ்ரீநாத் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கனடா, மெக்ஸிகோ, நேபாளம் போன்ற நாடுகள் பயப்படாத நிலையில், பிரதமா் மோடி பயப்படுவது ஏன்? இது இந்தியாவுக்கும், அதன் 150 கோடி மக்களுக்கும் அவமதிப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்

ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விரைவு ரயில்கள் அனைத்தும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது குறித்து தெற்கு ரயி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். முன்னதாக, இந்தச் சம்பவத்தில் 5 போ் உ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 போ் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் கொலை செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஞாயிற்ற... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு உடல் மீட்பு!

ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்... மேலும் பார்க்க

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க