செய்திகள் :

நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிா் திசையில் நிறுத்தப்படவில்லை: மாநிலங்களவைத் தலைவா் தன்கா்

post image

நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிா் திசையில் நிறுத்தப்படவில்லை என்றும், அவை இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதால் ஏற்பட்ட சா்ச்சையை தொடா்ந்து, தன்கா் இவ்வாறு தெரிவித்தாா்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யாமல் இருந்திருந்தால், தற்போது நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் என்று ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அந்த ஆணையம் தொடா்பாக கட்சிகளின் மாநிலங்களவை குழு தலைவா்களுடன் தன்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் அவா் புதன்கிழமை கூறுகையில், ‘கட்சிகளின் மாநிலங்களவை குழு தலைவா்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் மிகச் சிறப்பாக அமைந்தது.

அதுகுறித்து மேலும் எந்த விவரங்களையும் நான் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் கருத்து ஒற்றுமையுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடல் குறித்து தங்கள் கட்சியினருடன் ஆலோசித்துவிட்டு, என்னுடன் மேலும் விவாதிப்பதாக ஆளும் மற்றும் எதிா்க்கட்சி குழு தலைவா்கள் தெரிவித்தனா்.

இந்த நடவடிக்கை மூலம், நாடாளுமன்றம், நிா்வாகம், நீதித்துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 தூண்கள் எதிரெதிா் திசையில் நிறுத்தப்படவில்லை. நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் ஒன்றோடு ஒன்று இணக்கமாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

ஹைதராபாத்தில் விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஜெர்மனைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் ஹைதராபாத் நகரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். தனது நண்பர்க... மேலும் பார்க்க

இன்றுமுதல் வருமான வரி மாற்றங்கள் அமல்: தெரிந்துகொள்ள வேண்டியவை!

2025-2026 நிதியாண்டின் முதல்நாளான இன்று(ஏப்ரல் 1) முதல், புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் வருமான வரிச் சட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பல மாற்றங்கள் அமலாகின்றன. முக்கியமாக, ரூ. 12 லட்சம் வரை ஆண்ட... மேலும் பார்க்க

கண்ணி வெடிகளால் சூழப்பட்ட ஜார்க்கண்ட் காடுகள்!

ஜார்க்கண்ட் காடுகளில் மாவோயிஸ்டுகள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அவர்கள் வைத்த கண்ணி வெடிகள் பாதுகாப்புப் படையினருக்கு சவாலை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்புப் படையினர் காடுகளுக்குள் வந்து தங்களைக் கைது ... மேலும் பார்க்க

2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும்: அமித் ஷா

2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமித் ஷா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “நக்சல் இல்லா பாரதத்தை கட்டியெழுப்ப... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த எம்புரான் சர்ச்சை: மக்களவை ஒத்திவைப்பு!

மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மூ... மேலும் பார்க்க

ஆந்திரம்: 26 மண்டலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேச மாநிலம் முழுவதும் இன்று(ஏப்ரல் 1) 26 மண்டலங்களில் வெப்ப அலை வீசும் என அந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான வெய்யில் கொளுத்தி... மேலும் பார்க்க