செய்திகள் :

நாடாளுமன்றம் : அமளிக்கு நடுவே நிறைவேறிய இரு முக்கிய மசோதாக்கள்..! - முழு விவரம்

post image

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, மார்ச் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளே தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்தர் பிரதானுக்கும் இடையே பெரும் வார்த்தை போர் வெடித்தது.

இன்னொரு பக்கம், வாக்காளர் எண்ணிக்கை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்து, அதை சபாநாயகர்கள் ஏற்காத நிலையில் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையிலும் மத்திய அரசு இரண்டு முக்கிய மசோதாகளை நிறைவேற்றி இருக்கிறது.

சரக்கு போக்குவரத்து மசோதா 2024:

மத்திய கப்பல் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துதுறை அமைச்சர் சர்பாணந்த் சோனவால், கடந்த 2024 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சரக்கு போக்குவரத்து மசோதா 2024 மக்களவையில் அறிமுகம் செய்திருந்தார்.

சுமார் 169 ஆண்டு பழமையான இந்திய சரக்கு போக்குவரத்து சட்டம் 1856-க்கு மாற்றாக இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான விவாதம் மார்ச் 10-ம் தேதி நடைபெற்றது.

இதில் பேசிய அமைச்சர் சார்பானந்த் சோனவால், ``முதலீட்டாளர்களுக்கு கப்பல் வழி சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் பிரச்னைகளை களைவதற்கான பல்வேறு அம்சங்கள் மசோதாவில் கொண்டுவரப்பட்டிருக்கிறது” என்றார். கப்பல் வழியாக சரக்கு போக்குவரத்தை செய்யக்கூடியவர்களுக்கு வழங்கப்படும் ஆவணங்களில் என்ன வகையான பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது, அதன் அளவு எவ்வளவு, அவை சென்று சேரும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுமையாக இடம் பெற்று இருக்கும்.

இதன் மூலமாக முறைகேடுகள் தடுக்கப்படுவதுடன் வெளிப்படை தன்மையும் உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் பேசினார். மேலும் இது சட்டபூர்வமான ஒரு ஆவணம் என்றும், அவர் விளக்கம் அளித்தார். மேலும் மாறி உள்ள நவீன காலத்திற்கு ஏற்ப சரக்கு போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் தேவைப்பட்டது. அதற்காகத்தான் இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதாவில் சிறு வணிகங்களை பாதிக்காத வகையில் சரக்கு கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் விவரங்கள் இடம்பெறவில்லை, குறிப்பாக பெரிய கப்பல் நிறுவனங்கள் எந்த விதமான ஒழுங்கு முறையும் இல்லாமல் அதிக விலையை நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் வகையில் மசோதாவில் பல அம்சங்கள் இடம் பெற்றிருக்கிறது. இது கடல்சார் வணிகத்திலிருந்து சிறு நிறுவனங்களை அகற்றும் என குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

மசோதாவில் சில திருத்தங்களை கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கொண்டு வந்த திருத்தங்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.

பின்னர் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ரயில்வே திருத்த மசோதா:

இந்திய ரயில்வே வாரியச் சட்டம் 1905 ரத்து செய்யும் வகையில் ரயில்வே திருத்த மசோதா 2024 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 10-ம் தேதி மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான விவாதம் நடைபெற்றது.

இதில் பேசிய காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், `சுதந்திர அமைப்பாக உள்ள ரயில்வே வாரியத்தை அரசாங்கமே கையகப்படுத்துவதற்காக தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இப்படி ஒவ்வொரு சுதந்திர அமைப்பின் அதிகாரங்களை பறித்தால் அது நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக இருக்கும்’ என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

``ஏற்கனவே மிக மோசமாக உள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை மேம்படுத்த தவறிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த மசோதாவை மேலும் அதிக விவாதங்களுக்கு உட்படுத்தும் வகையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். ஆனால் எதிர்க்கட்சியினருக்கு கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.

அஸ்வினி வைஷ்ணவ்

விவாதத்தின் மீது பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ``இந்த புதிய மசோதாவால் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படாது, ரயில்வே வாரியங்கள், மண்டலங்கள் ஆகியவற்றின் உற்பத்தி, நோக்கம், செயல்பாடுகள் அப்படியே தான் இருக்கும்” என்றார்.

பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு விட்டதால், மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு விரைவில் சட்டமாக கொண்டு வரப்பட உள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

'சிங்கிள் பேமென்ட்' - நண்பருக்கு உதவி செய்ய டெஸ்லா கார் வாங்கிய ட்ரம்ப் - பின்னணி என்ன?!

'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' என்பதன் தற்போதைய அக்மார்க் எடுத்துகாட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அவரது நண்பர் எலான் மஸ்க்கும். ஒரு காலத்தில் எலியும், பூனையுமாக இருந்த இருவரும், அமெரிக்க தேர்தல் பிர... மேலும் பார்க்க

`என்னை அச்சுறுத்துகிறார்கள்; எமோஷனலாக உடைந்துவிட்டேன்' - தங்க கடத்தல் வழக்கு குறித்து ரன்யா ராவ்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருக்கிறார். தொடை... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை : `ஒரு வாக்கு, ஒரு மதிப்பு; எதிர்காலம் காக்க..!’ - இரா.சிந்தன்| களம் பகுதி 2

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

Dharmendra Pradhan: 'நவீன் பட்நாயக்கின் தலைவலி; மோடியின் தூதுவர் - யார் இந்த தர்மேந்திர பிரதான்?

'ஒடிசா அரசியல்!'புத்தாயிரத்தின் தொடக்கத்தில் 2000 ஆம் ஆண்டில் நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தல் அது. பிஜூ பட்நாயக்கின் மறைவுக்குப் பிறகு நவீன் பட்நாயக் கட்சிக்குத் தலைமையேற்று அந்தத் தேர்தலுக்கான வேலைகளை... மேலும் பார்க்க

`NEP-யை விட சிறப்பாகச் செயல்படும் ஒரு மாநில கல்வியை ஏன் சீர்குலைக்க வேண்டும்?'- அன்பில் மகேஸ் கேள்வி

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசுக்கும், தமிழ்நாடு தி.மு.க அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. நேற்றுவரை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ரூ. 2,000 கோடி நிதி க... மேலும் பார்க்க

`நாங்க ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம் MLA-க்களை சட்டசபையிலிருந்து...' - பாஜக சுவேந்து அதிகாரி சர்ச்சை

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 2026-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான அரசியல் வேலைப்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன. இதில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ... மேலும் பார்க்க