செய்திகள் :

நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை

post image

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்(20) வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றார். ஆனால் அவர் பாதுகாப்புப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நேரத்தில், மனநிலை சரியில்லாதவராக அவர் இருந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

எல்லைச் சுவரையொட்டிய ஒரு மரத்தில் ஏறி நாடாளுமன்றத்திற்குள் அவர் நுழைய முயன்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து உளவுத் துறை உள்பட பல மத்திய அமைப்புகள் ராமிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்திரன்

இதுகுறித்து ராமின் மூத்த சகோதரர் உமேஷ் குமார் கூறுகையில், ராமுக்கு இந்தி படிக்கத் தெரியாது.

அவர் பணிபுரிந்த சூரத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் தற்செயலாக தில்லிக்கு தவறான ரயிலில் சென்றிருக்கலாம். மேலும் ஏதோ தெரியாத ஆபத்திலிருந்து தஞ்சம் அடைய தனது சகோதரர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றிருக்கலாம்.

அதிகாரிகள் ராமுக்கு எதிராக எந்த ஆட்சேபனைக்குரிய அல்லது சந்தேகத்திற்கிடமான ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை.

எனவே அவரை தந்தையிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய அமைப்புகளின் விசாரணைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ராமை தில்லி போலீஸார் ஒப்படைத்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Ram Shankar Bind (20) who was arrested for attempting to scale a wall of the Parliament complex in Delhi has been released.

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’..! பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இத... மேலும் பார்க்க

புதிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு(ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ்.), ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்ப... மேலும் பார்க்க

மறைந்த சுதாகா் ரெட்டி உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுரவரம் சுதாகா் ரெட்டியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்க... மேலும் பார்க்க

இந்தியா தலைமையிலான புலி இனங்களைப் பாதுகாக்கும் கூட்டணியில் இணைந்த நேபாளம்!

புலி, சிங்கம் உள்பட 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் இந்தியா தலைமையிலான சா்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளது. இதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களை அச்சுறுத்தும் மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம்! தனியாா் பள்ளிகளில் கண்காணிப்பு தீவிரம்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இளைஞா்கள், மாணவிகள் மத்தியில் மத அடிப்படைவாத பிரசாரங்கள் அதிகரித்து வருவது பாதுகாப்பு முகமைகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில், இளைஞா்களிடையே ... மேலும் பார்க்க

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனை வெற்றி

‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளி வீரா்கள் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அவா்களை பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல்கட்ட சோதனை (ஐஏடிடி-01) ஞாயிற்ற... மேலும் பார்க்க