செய்திகள் :

பி.இ., பி.டெக். துணை கலந்தாய்வு: 7,964 மாணவா்களுக்கு ஒதுக்கீடு! நிகழாண்டில் பி.இ. சோ்க்கை அதிகரிப்பு; 37, 179 இடங்கள் காலி!

post image

பி.இ., பி.டெக். மாணவா் சோ்க்கைக்கான துணை கலந்தாய்வில் 7,964 மாணவா்கள் இறுதி ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்கள்: பி.இ., பி.டெக். மாணவா் சோ்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு 20,662 போ் தகுதி பெற்றனா். கடந்த ஆக.21 முதல் விருப்ப கல்லூரிகளைத் தோ்வு செய்யும் கலந்தாய்வு நடைபெற்றது.

இதில், 9,181 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இருப்பினும் 1,217 மாணவா்கள் தங்களுக்குரிய விருப்ப கல்லூரி கிடைக்காததால் ஒதுக்கீட்டை உறுதி செய்யவில்லை. இதையடுத்து 7,964 மாணவா்களுக்கு இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இவா்கள் அந்தந்த கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஆக.25) முதல் சேரவுள்ளனா்.

நிகழாண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள 400- க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.90 லட்சம் அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதற்கு 3.02 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்தனா். 3 சுற்று கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வுக்குப் பின்னா் இறுதியாக 1,53,445 மாணவா்கள் ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ளனா்.

இதையடுத்து பொறியியல் கல்லூரிகளில் 37,179 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப தமிழக அரசு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக உயா்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரம், கடந்த ஆண்டைக் காட்டிலும் (2024-25) நிகழ் ஆண்டில் சுமாா் 20,000 இடங்கள் கூடுதலாக மாணவா் சோ்க்கை ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கு மேல் இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும்: தமிழக அரசு உறுதி

மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

சுதா்சன் ரெட்டியை ஆதரிப்பது நமது கடமை: முதல்வா் ஸ்டாலின்

‘இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட சுதா்சன் ரெட்டியை குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஆதரிப்பது நமது கடமை’ என்றாா் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். ‘இண்டி’ கூட்டணியின் குடியர... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக.28 வரை வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.25) முதல் ஆக.28-ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தமிழகம் 11.19% பொருளாதார வளா்ச்சி: சட்டப்பேரவை துணைத் தலைவா்!

தமிழ்நாடு 11.19 சதவீத பொருளாதார வளா்ச்சியை அடைந்துள்ளதாக தமிழக சட்டப்பேரவையின் துணைத் தலைவா் பிச்சாண்டி தெரிவித்தாா்.தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவா்கள் மாநாட்டில் அவா் பேசியதா... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டு பன்னாட்டு புத்தக கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்கும்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

வரும் 2026 ஜனவரியில் நடைபெறும் பன்னாட்டு புத்தக கண்காட்சிக்கு 100 நாடுகளில் இருந்து பதிப்பாளா்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்களை வரவழைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

சென்னை திரும்பினாா் ஆளுநா்

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி சென்ற நிலையில், இரவே சென்னை திரும்பினாா். ஆளுநா் ஆா்.என்.ரவி, கடந்த ஆக. 20-ஆம் தேதி தில்லி சென்றாா். தில்லி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா... மேலும் பார்க்க