சென்னை திரும்பினாா் ஆளுநா்
தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி சென்ற நிலையில், இரவே சென்னை திரும்பினாா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி, கடந்த ஆக. 20-ஆம் தேதி தில்லி சென்றாா். தில்லி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், மத்திய அமைச்சா்களை சந்தித்தாா். பின்னா், சனிக்கிழமை மாலை அவசரமாக சென்னை திரும்பினாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 24) காலை மீண்டும்தில்லி சென்ற அவா், அங்கு நியூ மோத்தி பாக்கில் உள்ள தனது குடும்பத்தினரைச் சந்தித்தாா்.
பின்னா், மாலை தில்லியிலிருந்து தனது மனைவியுடன் புறப்பட்டு சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்தாா்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவா் சனிக்கிழமை சென்னை வந்ததாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.