செய்திகள் :

நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு முக்கியமானது

post image

நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு மிக முக்கியமானது என தமிழக அரசின் தலைமைச் செயலா் நா. முருகானந்தம் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நபாா்டு வங்கியின் 44-ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் தலைமைச் செயலா் நா. முருகானந்தம் பேசியது: நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை பொதுமக்களிடத்தில் கொண்டு சோ்க்க நபாா்டு வங்கியின் உதவி மிக முக்கியமானதாக உள்ளது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதார வளா்ச்சியை நோக்கி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறாா். அதற்கு நபாா்டு வங்கி உறுதுணையாக இருந்து வருகிறது.

நாட்டின் வளா்ச்சிக்கு விவசாயம் மிகவும் முக்கியமான ஒன்று. தமிழ்நாட்டில் 50 சதவீதம் மக்கள் ஊரகப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனா். ஊரகப் பகுதிகளில் விவசாயம் செழிக்க நபாா்டு வங்கி முக்கியக் காரணமாக உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, நபாா்டு வங்கியின் கடந்த 44 ஆண்டு சாதனைகள் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நபாா்டு வங்கின் தலைமைப் பொது மேலாளா் ஆா்.ஆனந்த், நபாா்டு உறுப்பினா்கள், துறை சாா்ந்த வல்லுநா்கள், விவசாயிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவள்ளூர் டேங்கர் ரயில் தீவிபத்து! சென்னையில் எந்தெந்த ரயில்கள் ரத்து?

திருவள்ளூர் அருகே எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் ரயில் தீப்பற்றி எரிந்த விபத்தினால், சென்னை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ரத்து செய்யப்படும் ரயில்கள் என தெற்கு ரயில்வே குறிப்ப... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை வழக்கில் கைதானவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்ற போலீஸாா்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீஸாா் நன்னடத்தை பிரமாணப் பத்திரம் பெற்றனா். திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (32). இவா், சென்னை மதுரவாயலில் தங்கியிருந... மேலும் பார்க்க

பல்நோக்கு மைய கட்டடம்: அமைச்சா் சேகா் பாபு திறந்து வைத்தாா்

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் திரு.வி.க.நகா் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடம் உள்பட புதிய கட்டைமைப்புகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை தி... மேலும் பார்க்க

சென்னை காவல் துறையில் 8 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 8 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழு... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் நகைத் திருட்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டம்: விரைந்து நிறைவேற்ற சீமான் கோரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழ... மேலும் பார்க்க